ஐரோப்பா

பாரிஸின் ரயில் நிலையத்தில் கத்திக் குத்து தாக்குதல் : மூவர் படுகாயம்!

பாரிஸில் உள்ள முக்கிய கேர் டி லியோன் ரயில் நிலையத்தில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

வரும் மாதங்களில் கோடைக்கால விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு குறித்த கவலைகளை இந்த சம்பவம் தோற்றுவித்துள்ளது.

பாரிஸ் பொலிசார் கூறுகையில், காலை 8 மணியளவில் தாக்குதலில் கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்திய தாக்குதலாளியை அதிகாரிகள் விரைவாகக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்ற இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

10,500 ஒலிம்பியன்கள் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வரவேற்கத் தயாராகி வரும் பாரிஸில் ஜூலை 26 அன்று சீன் ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய திறந்தவெளி விழாவுடன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்