இலங்கை செய்தி

மஹிந்த சிந்தனைக்கு உடன்படும் வேட்பாளருக்கு மொட்டுக் கட்சியின் ஆதரவு

COLOMBO, Nov. 13, 2019 (Xinhua) — Gotabaya Rajapaksa (2nd L), Sri Lanka’s presidential candidate of the main opposition Sri Lanka Podujana Peramuna (SLPP), attends a final campaign rally in Homagama, outskirts of Colombo, Sri Lanka, on Nov. 13, 2019. The presidential elections of Sri Lanka will be held on Nov. 16. (Photo by Gayan Sameera/Xinhua/IANS)

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்படும் அல்லது ஆதரிக்கப்படும் வேட்பாளர் ‘மஹிந்த சிந்தனையுடன்’ உடன்பட்டு அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் நடக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்றின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் வேட்பாளராக இருக்கக் கூடாது என இன்று ஒன்று கூடிய அனைவரும் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கூறுகையில்,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ‘மஹிந்த சிந்தனையுடன்’ இணங்கும் நபராகவே இருக்க வேண்டும் என்ற கருத்தையே கூடியிருந்தவர்களில் பெரும்பாலோர் கொண்டிருந்தனர்.

செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் அங்கீகரிக்கப்பட்டதாகவும், வேட்பாளர் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை