வட அமெரிக்கா

கனடாவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ;2 குழந்தைகள் உட்பட் ஐவர் பலி!

கனடா நாட்டில் ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 6 மற்றும் 12 வயது குழந்தைகள் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடாவின் வடக்கே ஒன்டாரியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர் என்று அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளனர். அதில், அங்குள்ள தான்கிரேட் சாலையில் 41 வயது மதிக்கத்தக்க நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற பொலிஸார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிஸாருக்கு, தொடர்ந்து 10 நிமிடங்களில் மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தது. இதன்படி சென்று பார்த்தபோது, துப்பாக்கிச் சூடு காயங்களுடன் 45 மதிக்கத்தக்க நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். அதனுடன், 36 வயதுடைய பெண், 6 மற்றும் 12 வயதுடைய 2 பேரின் உடல்களும் காணப்பட்டன. அவர்களும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர் என கூறினர்.

இந்த மரணங்கள் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content