காசாவில் தொடர் தாக்குதல் – குழந்தை உள்பட 06 பேர் மரணம்
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் அல் ஜசீரா ஒளிப்பதிவாளர் ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், அந்த ஒளிப்பதிவாளர் குறி பார்த்து சுடும் வீரராகப் பணியாற்றிய ஒரு பயங்கரவாதி என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன.
இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த அக்டோபர் முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
மேலும், இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 1,007 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




