ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கு ஒன்றரை வருடங்கள் சிறை தண்டனை
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சமிந்த விஜேசிறி தொடர்பான வழக்கு இன்று (28) பதுளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பதுளை மேல்நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று (28) தீர்ப்பளித்தது.




