மோடியின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் – ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கைது
நீட் பரீட்சை வினாத்தாள் கசிவுப் பிரச்சினைக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து, இந்தியப் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே இன்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் போராட்டக்காரர்களை கலைக்கவும், அந்த பகுதியில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தவும், பொலிஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் பொலிஸாரினால் அந்த பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது, பிரியங்கா காந்தி வத்ரா, “அவர்கள் கோழைகள். அவர்கள் பயப்படுகிறார்கள். நாங்கள் அவர்களுக்குப் பயப்படவில்லை. அவர்கள்தான் எங்களுக்குப் பயப்படுகிறார்கள்,” என்று கூறியுள்ளார்.
கைதுகள் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், இந்த நடவடிக்கையை “துரதிர்ஷ்டவசமானது” என்று குறிப்பிட்டதோடு, எதிர்க்கட்சிகள் மாணவர்களின் நலனுக்காகப் போராடுவதாகவும் கூறினார்.
“நாங்கள் அனைவரும் இந்த நாட்டின் மாணவர்களின் நலனுக்காகப் போராடுகிறோம். எங்களுக்கு நீதி வேண்டும். இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்… 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு உள்ளனர். கைது செய்யப்படுவது குறித்து யாரும் அஞ்சவில்லை… நீதி கிடைக்கும் வரை இந்த இயக்கம் தொடரும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.





