இலங்கை செய்தி

இந்தியா செல்லும் முன் கூட்டமைப்பினரை சந்திக்கும் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்கிழமை பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இது தொடர்பான கலந்துரையாடலின் போது ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான இறுதித் தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக இராசமாணிக்கம் எம்.பி குறிப்பிட்டார்.

இதனால், எதிர்வரும் பேச்சுவார்த்தையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி வழங்கும் தீர்வுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வார இறுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னதாக வடக்கில் உள்ள 6 தமிழ் அரசியல் கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை