உலகம் செய்தி

பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

பாகிஸ்தானின்(Pakistan) கராச்சியில்(Karachi) உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 80 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜின்னா(Jinnah) மற்றும் சிவில் மருத்துவமனைகளுக்கு இதுவரை 28 பேர் கொண்டு வரப்பட்டதாகவும், மேலும் 20 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர், ஆனால் நிலையான நிலையில் உள்ளன என்றும் காவல் அறுவை சிகிச்சை நிபுணர் சம்மையா சையத்(Samaiya Syed) குறிப்பிட்டுளளார்.

மேலும், இதுவரை 18 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த மரபணு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்மையா சையத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

பாகிஸ்தான் வணிக வளாக தீவிபத்து – பலி எண்ணிக்கை உயர்வு!

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி