(UPDATED) போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் மரணம்
Nine killed in Israeli airstrikes in Gaza amid ceasefire
UPDATE
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவை அடுத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
——————————————————————————————–
போரினால் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது மீண்டும் தாக்குதல் நடத்துமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) உத்தரவிட்டதை அடுத்து, இஸ்ரேலிய இராணுவம் வடக்கு மற்றும் தெற்கு காசாவில் நடத்திய தாக்குதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா நகரத்தின் சப்ரா(Sabra) பகுதியில் நான்கு பாலஸ்தீனியர்களும், கான் யூனிஸ்(Khan Younis) பகுதியில் ஐந்து பாலஸ்தீனியர்களும் உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீன பிரதேசத்தில் போராளிக் குழுவான ஹமாஸ்(Hamas) போர் நிறுத்த விதிகளை மீறியதாக நெதன்யாகு தெரிவித்ததை அடுத்த இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.





