392சடலங்கள் மீட்பு: 1,500 பேர் தொடர்ந்து மாயம்
நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில், இமயமலை ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட பாறை மற்றும் சேறு சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் 390-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை அன்று மீட்புக் குழுவினர் சேற்றில் இறங்கித் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
நேபாளத்தில் மட்டும் குறைந்தபட்சம் 392 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டை பிராந்தியமான திபெத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனப் பிரதமர் லி சியாங், பேரழிவு நடந்த மறுநாளான வியாழக்கிழமை பிற்பகல் திபெத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்டு, “அவசரகால மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை” நேரில் வழிகாட்டினார் என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாள சுற்றுலாத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, 34 நாடுகளைச் சேர்ந்த 668 சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை காலை முதல் தொடர்பில் இல்லை என்றும், அவர்களில் பெரும்பாலோர் மலையேற்றப் பயணங்களில் (Trekking) ஈடுபட்டிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் குறைந்தது 177 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 90 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், 34 பேர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள், 33 பேர் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் மற்றும் 25 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள்.
நேபாளத்தில் காணாமல் போனவர்களில் 100 சீனக் குடிமக்களும் அடங்குவர் என்று பெய்ஜிங் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திபெத்தின் கைரோங் (Gyirong) மாவட்டத்தில் 260 வெளிநாட்டவர்கள் உட்பட 558 பேர் காணாமல் போயுள்ளதாக சீன அரசுச் செய்தி நிறுவனமான CCTV தெரிவித்துள்ளது.




