உலகம் செய்தி

“தற்காப்புக்காகவே சுட்டோம்”: வெள்ளை மாளிகை அறிவிப்பால் வலுக்கும் சர்ச்சை

அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரில் பெடரல் படையினரால் 37 வயதான ரெனி நிக்கோல் குட் (Renee Nicole Good) என்ற பெண் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாரிய வன்முறை வெடித்துள்ளது.

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் நிலைநிறுத்தப்பட்டுள்ள பெடரல் படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நேற்று இரவு கடுமையான மோதல்கள் இடம்பெற்றன.

குறித்த பெண் தனது காரால் (car) அதிகாரிகளை மறித்ததால், தற்காப்புக்காகவே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பெடரல் படையினரின் வருகையாலேயே தெருக்கள் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக மினசோட்டா (Minnesota) அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வெள்ளை மாளிகையின் விளக்கத்தை உள்ளூர் அதிகாரிகள் மறுத்துள்ள நிலையில், அங்கு பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி