செய்தி விளையாட்டு

Messi வரலாற்று சாதனை: Argentina வெற்றிநடை

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி Lionel Messi தனது ஆறாவது உலகக் கோப்பை தொடரில் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மூன்று கோல்களை அடித்து அசத்தியதுடன், உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த மீரோஸ்லாவ் குளோசின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி, தங்களது உலகக் கோப்பை மகுடத்தைத் தக்கவைக்கும் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

எத்தனையோ விருதுகளையும் சாதனைகளையும் குவித்த மெஸ்ஸியின் வாழ்நாளின் மிக முக்கிய தருணம் போட்டியின் 76-வது நிமிடத்தில் நிகழ்ந்தது. பாக்ஸிற்கு சற்று வெளியிலிருந்து அவர் அடித்த பந்து கீப்பரையும் தாண்டி தாழ்வாகச் சென்று வலையைத் தொட்டது.

இந்த கோலின் மூலம் மெஸ்ஸி, உலகக் கோப்பைகளில் 16 கோல்கள் அடித்துள்ள ஜெர்மனியின் முன்னாள் பார்வர்டு வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையைச் சமன் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவர் மைதானத்திலிருந்து மாற்றப்பட்டபோது, ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

கடந்த 2022 கத்தார் உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் சவூதி அரேபியாவிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்திருந்தது. ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்தவொரு அதிர்ச்சிகரமான தோல்வியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மெஸ்ஸி உறுதியாக இருந்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி