இலங்கை செய்தி

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மலேசிய நாட்டவர்

Malaysian national arrested at Bandaranaike International Airport

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் மலேசிய(Malaysian) நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 250 மில்லியன் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

25 வயதுடைய மலேசிய நாட்டவர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அபுதாபியிலிருந்து(Abu Dhabi) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சாக்லேட் என பெயரிடப்பட்ட பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோகைன் தொகையை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை