ஐரோப்பா செய்தி

மதுரோ சட்டவிரோத ஜனாதிபதி – பிரித்தானியா அறிவிப்பு

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பிரித்தானியா சட்டவிரோத ஜனாதிபதியாக கருதுகின்றதென பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஆட்சியின் முடிவு குறித்து வருத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

வெனிசுலா மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் சட்டபூர்வமான அரசாங்கத்திற்கு அமைதியான மாற்றம் வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நோக்கம் என்றும், இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

இதேவேளை, வெனிசுலாவில் உள்ள சுமார் 500 பிரித்தானிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கராகஸில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துடன்
அரசு இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.

வெனிசுலாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி