பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதில் ஈரான் தீவிரம்
ஈரானின் ஆயுதப் படைகளுக்கான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) உறுதி அளித்துள்ளதாக அரச ஊடகமான IRNA தெரிவித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி
பெசெஷ்கியான், நாட்டின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தவும், ஆயுதப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தனது அரசாங்கம் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனக் குறிப்பிட்டார்.
இலக்கை எ எட்டுவதற்கு நாட்டின் அனைத்து நிர்வாக அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.




