ஐரோப்பா செய்தி

ஸ்வீடன் நேட்டோவில் சேர விரும்பினால், எங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்க வேண்டும்: துருக்கி

Swedish Prime Minister Ulf Kristersson and NATO Secretary-General Jens Stoltenberg shake hands next to Turkish President Tayyip Erdogan, on the eve of a NATO summit, in Vilnius on July 10, 2023. (Photo by YVES HERMAN / POOL / AFP)

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ அமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அடங்கும். இருப்பினும், சுவீடன் மற்றும் பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் நேட்டோ இராணுவ அமைப்பில் சேர்க்கப்படவில்லை.

இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியபோது நேட்டோவில் சேராத ஐரோப்பிய நாடுகளான சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகியவை நேட்டோவில் சேர விண்ணப்பித்தன. துருக்கி நேட்டோவில் உறுப்பினராக உள்ளது, எனினும், இந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை.

ஒரு புதிய நாடு நேட்டோவில் உறுப்பினராக சேர, அந்த அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் தங்கள் சம்மதத்தை அளிக்க வேண்டும். நேட்டோவில் உள்ள ஒரு நாடு எதிர்த்தாலும், புதிய உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்கும் நாடு நேட்டோவில் சேர முடியாது.

இந்நிலையில் ஸ்வீடனுடன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் துருக்கியை ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் பெற அனுமதித்தால், சுவீடனை நேட்டோவில் அங்கத்துவம் பெற அனுமதிப்போம் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர துருக்கியின் விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான சைப்ரஸுடன் துருக்கியின் மோதலால் அந்த விண்ணப்பம் நிலுவையில் உள்ளது.

இப்போது, ஸ்வீடன் நேட்டோவில் சேர விரும்பினால், எங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என துருக்கி அச்சுறுத்தி வருகின்றது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி