உலகம்

தென்னாப்பிரிக்காவில் பாரம்பரிய சடங்கில் ஈடுபட்ட 41 இளைஞர்கள் உயிரிழப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம்பெறும் பாரம்பரிய சடங்குகளில் ஈடுபட்ட குறைந்தது 41 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராம்பரிய கலாச்சாரத்தின்படி, ஆண் விருத்த சேதனம் செய்யும் சடங்கில் கலந்துகொண்ட இளைஞர்களே மேற்படி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெற்றோர்கள் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தரங்களைப் பின்பற்றத் தவறியமையால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னியில் பலத்த பாதுகாப்புடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

  • December 31, 2025
  • 0 Comments

சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த டிசம்பர் 14-ஆம் திகதி ஹனுக்கா திருவிழாவின் போது நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிட்னி நகரம் மிக பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புத்தாண்டை வரவேற்றுள்ளது. 15 பேர் பலியான அந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, 2,500-க்கும் மேற்பட்ட பொலிஸார் சிட்னி முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நவீன ரகத் துப்பாக்கிகளுடன் பொலிஸார் ரோந்து செல்வது ஆஸ்திரேலியாவில் ஒரு அரிய காட்சியாக இருந்தது. நேற்று நள்ளிரவு 11 மணிக்கு, தாக்குதலில் உயிரிழந்தவர்களை […]

ஐரோப்பா செய்தி

ரயில் சேவைகள் கிடைக்காது- இங்கிலாந்து,ஸ்கொட்லாந்து பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை

  • December 31, 2025
  • 0 Comments

புத்தாண்டின் முதல் வாரத்தில் முக்கிய பொறியியல் பணிகள் காரணமாக, எல்லை தாண்டிய ரயில் சேவைகளில் இடையூறுகள் ஏற்படும் என பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, லாக்கர்பி (Lockerbie) மற்றும் கார்லைல் (Carlisle) இடையேயான மேற்கு கடற்கரை பிரதான ரயில் பாதை புத்தாண்டு தினத்திலிருந்து ஆறு நாட்களுக்கு மூடப்படும் என நெட்வொர்க் ரயில் அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், இரண்டு நிலையங்களுக்கும் இடையே பயணிகளுக்கு மாற்று பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதை மூடப்படும் காலப்பகுதியில் கார்லைல் […]

உலகம் செய்தி

மலர்ந்தது புத்தாண்டு – 2026 ஐ முதல் நாடாக வரவேற்றது கிரிபாட்டி

  • December 31, 2025
  • 0 Comments

உலகில் முதல் நாடாக கிரிபாட்டி தீவு புத்தாண்டை கொண்டாட ஆரம்பித்துள்ளது. இலங்கை நேரப்படி, கிரிபாட்டியில் புத்தாண்டு சுமார் 8.5 மணிநேரம் முன்னதாகவே பிறந்துள்ளது. அதாவது இலங்கையில் இன்று 31 மதியம் 3:30 க்கு கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிட்டது. அந்தவகையில் தற்போது கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் கிரிபாட்டி 2026 ஆம் ஆண்டை வரவேற்று, உலகின் முதல் நாடாக புத்தாண்டு கொண்டாடுகிறது. கிரிபாட்டி தீவைத் தொடர்ந்து நியூசிலாந்தின் சத்தாம் தீவில் வசிக்கும் 600 க்கும் மேற்பட்ட மக்கள் 2026 […]

உலகம்

பெருவில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து! ரயில் சேவைகள் பாதிப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

பெருவில் இரண்டு சுற்றுலா ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். கோரிவைராச்சினா (Qoriwayrachina ) அருகே நிகழ்ந்த இந்த விபத்தில்,  ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து, மச்சு பிச்சுவை (Machu Picchu) அருகிலுள்ள குஸ்கோ (Cuzco) நகரத்துடன் இணைக்கும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.  

அரசியல் இலங்கை செய்தி

தீய சக்திகளுக்கு அமைச்சர் லால்காந்த எச்சரிக்கை!

  • December 31, 2025
  • 0 Comments

“மக்கள் சக்திக்கு முன்னால் வேறு எந்த சக்தியும் தாக்கு பிடித்து நிற்க முடியாது. எனவே, மக்கள் ஆணைக்கு புறம்பாக செயல்பட்டால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” இவ்வாறு அமைச்சர் லால்காந்த K. D. Lalkantha எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஆட்சி அதிகாரத்தை இழந்து தவிக்கும் தரப்பானது தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக வழியிலான பயணம் தொடர்பில் கவலையடைந்துள்ளது. எனவே, எமது பயணத்தை குழப்புவதற்கு அத்தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்த சதி […]

உலகம்

புத்தாண்டு கொண்டாட்டம் – தனது பாரம்பரியத்தை மாற்றிய ஹொங்கொங்!

  • December 31, 2025
  • 0 Comments

ஹொங்காங் (Hong Kong) தனது பாரம்பரிய புத்தாண்டு தின வாணவேடிக்கை நிகழ்ச்சியை விக்டோரியா துறைமுகத்தில் இம்முறை இரத்து செய்துள்ளது. நவம்பரில் ஏற்பட்ட பேரழிவுகரமான தீ விபத்தில் 161 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாணவேடிக்கைகளுக்குப் பதிலாக, நகரத்தின் மத்தியில்  ஒரு இசை நிகழ்ச்சியையும் எட்டு முக்கிய அடையாளங்களில் மூன்று நிமிட ஒளி நிகழ்ச்சியையும் நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாவுக்கான செயலாளர் ரோசன்னா லா (Rosanna Law), இந்த ரத்து […]

உலகம் ஐரோப்பா செய்தி

பதின்ம வயதில் நேர்ந்த கொடூரம்: பிபிசி வானொலியில் அரசி கமிலா உருக்கமான வாக்குமூலம்

  • December 31, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசி கமிலா, தனது பதின்ம வயதில் இரயிலில் பயணம் செய்தபோது பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக முதன்முறையாகப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். பிபிசி (BBC) வானொலியில் ஒளிபரப்பான பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விவாதத்தில் பங்கேற்றபோது அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார். கடந்த ஜூலை மாதம், தனது மனைவி மற்றும் இரு மகள்களைப் பறிகொடுத்த பிபிசி வர்ணனையாளர் ஜோன் ஹண்டின் (John Hunt) துணிச்சலான போராட்டமே, நீண்டகாலமாக மறைத்து வைத்திருந்த தனது வலியைப் பேசத் தூண்டியதாக அரசி குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் […]

உலகம் செய்தி

கலீதா ஜியாவின் இறுதி அஞ்சலி – டாக்காவில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்

  • December 31, 2025
  • 0 Comments

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, லட்சக்கணக்கான மக்கள் தலைநகர் டாக்காவில் திரண்டனர். பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா, உடல் நலக்குறைவால் தனது 80 ஆவது வயதில் நேற்று காலமானார். தேசியக் கொடியால் மூடப்பட்ட வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட போது, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் நாடு முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளாக ஆயிரக்கணக்கான பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் […]

இலங்கை செய்தி

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடை

  • December 31, 2025
  • 0 Comments

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். இலங்கை வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ருவன் குமார, சமீர லியனகே மற்றும் கே. ஜெயதிலக ஆகியோர் நன்கொடை கையளிக்கும் நிகழ்வில் கலந்து […]