உலகம் செய்தி

புடினின் இல்லத்தில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி

  • December 31, 2025
  • 0 Comments

ரஷ்ய அரசாங்க தளங்களை உக்ரைன் இலக்குவைத்ததாக மாஸ்கோவின் கூற்றுகளை “வேண்டுமென்றே செய்த கவனச்சிதறல்” என்றும் சமாதான முன்னெடுப்புகளைத் தடம் புரளச் செய்யும் முயற்சி என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas) கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனியார் வீட்டில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக மாஸ்கோ குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலையில் “உக்ரைனின் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களை கண்மூடித்தனமாக குறிவைத்த ஆக்கிரமிப்பாளரின் ஆதாரமற்ற கூற்றுகளை யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது” என காஜா கல்லாஸ் […]

உலகம் செய்தி

கிழக்கு ஆசியாவில் அதிர்ந்த புத்தாண்டு முழக்கம்! ஜப்பான் மற்றும் கொரியாவின் கோலாகல வரவேற்பு.

  • December 31, 2025
  • 0 Comments

இங்கிலாந்து நேரப்படி மதியம் 15:00 மணியளவில் (இலங்கை/இந்திய நேரப்படி இரவு 8:30 மணி), ஜப்பான், தென்கொரியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக 2026-ஆம் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மக்கள் உற்சாகமாகப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர். இதன் நேரலைக் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. டோக்கியோவின் முக்கிய ரயில் நிலையப் பகுதியான சிபுயாவில் (Shibuya) பாதுகாப்பு காரணங்களுக்காக, தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்த முறையும் கவுண்ட்டவுன் (Countdown) நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. சியோல் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

காசாவில் மனிதாபிமானப் பணிகள் முடங்கும் அபாயம்

  • December 31, 2025
  • 0 Comments

காசாவில் இயங்கி வரும் 37 சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், அங்கு பணியாற்றும் பாலஸ்தீன ஊழியர்களின் முழு விபரங்களை வழங்கத் தவறியதால், அவை காசாவில் இயங்குவதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது. நாளை (ஜனவரி 1) முதல் அமலுக்கு வரும் இந்தத் தடையால், காசாவிற்குச் செல்லும் உணவு மற்றும் மருத்துவ விநியோகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. ஹமாஸ் போன்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் உதவி அமைப்புகளில் ஊடுருவுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என இஸ்ரேல் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும், ஐக்கிய […]

அரசியல் இலங்கை செய்தி

சஜித் தலைவர்: ரணில் ஆலோசகர்! புதிய யோசனை முன்வைப்பு!!

  • December 31, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி SJP மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி UNP என்பன ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando இன்று (31) தெரிவித்தார். சஜித் பிரேமதாசவின் Sajith Premadasa தலைமையின்கீழ், ரணில் விக்கிரமசிங்கவின் Ranil Wickremesinghe ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேற்று (30) சந்திப்பு நடைபெற்றது. […]

உலகம் ஐரோப்பா செய்தி

மீண்டும் ஆரம்பமானது யூரோஸ்டார் ரயில் சேவை

  • December 31, 2025
  • 0 Comments

மின்சாரக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை ஸ்தம்பிதமடைந்திருந்த லண்டன் மற்றும் பாரிஸ் இடையிலான சுரங்கப்பாதை ரயில் போக்குவரத்து இன்று காலை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மின்தடை மற்றும் ரயில் செயலிழப்பு காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குச் செல்ல முடியாமல் லண்டன் செயின்ட் பான்க்ராஸ் (London St Pancras) நிலையத்தில் சிக்கித் தவித்தனர். தற்போது பெரும்பாலான சேவைகள் மீளத் தொடங்கியுள்ள போதிலும், கடந்த காலத் தாமதங்களின் தாக்கம் காரணமாக இன்றும் சில ரயில்கள் ரத்து […]

#Denmark #PostNord #DigitalTransformation #PostalService #HistoryEnds #DenmarkNews #WorldNewsTamil #DigitalDenmark #LetterWriting #EndOfAnEra ஐரோப்பா செய்தி

தபால் சேவைக்கு விடை கொடுத்த டென்மார்க்: 400 ஆண்டுகால வரலாறு முடிவு!

  • December 31, 2025
  • 0 Comments

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் கடிதப் பயன்பாடு அருகிப்போன நிலையில், டென்மார்க் தனது 400 வருடகால பாரம்பரியமான தபால் சேவையை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில், டென்மார்க்கில் கடிதங்களின் பாவனை 90 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. இதனால் இச்சேவையைத் தொடர்ந்து முன்னெடுப்பதால் பாரிய நஷ்டம் ஏற்படுத்துவதாக அந்நாட்டு அரச தபால் நிறுவனமான போஸ்டனோர்ட் (PostNord ) தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, டென்மார்க் முழுவதும் வீதிகளில் […]

இலங்கை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கைகொடுக்கும் கிரிக்கெட்; பாகிஸ்தான் தொடர் மூலம் நிதி சேகரிப்பு

  • December 31, 2025
  • 0 Comments

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மூலம் கிடைக்கும் முழு வருமானத்தையும், ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. ‘டித்வா’ (Ditwah) புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் மீட்பு மற்றும் புனர்வாழ்வுப் பணிகளுக்கு வலுச்சேர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் தொடரின் போது #VisitSriLanka எனும் விசேட ஹேஷ்டேக் (Hashtag) பிரசாரத்தையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு […]

ஐரோப்பா செய்தி

புத்தாண்டு- பிரித்தானியாவின் வானிலை முன்எச்சரிக்கை

  • December 31, 2025
  • 0 Comments

புத்தாண்டு தினத்தன்று இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் குளிர்ந்த மற்றும் பனிப்பொழிவான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 02 ஆம் திகதியன்று நள்ளிரவு முதல் நண்பகல் வரை மஞ்சள் எச்சரிக்கை அமுலில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து முழுவதும் பனிக்கட்டியும் பனிப்பொழிவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. லண்டன் மற்றும் எடின்பர்க்கில் புத்தாண்டு வாணவேடிக்கைகளை காணச் செல்லும் மக்கள், பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகளை பெற்றுக்கொள்கையில் பயண நேரம் […]

உலகம் செய்தி வணிகம்

அமெரிக்கப் பங்குச்சந்தையில் வரலாற்றுச் சாதனை

  • December 31, 2025
  • 0 Comments

அமெரிக்கப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 2025-ஆம் ஆண்டை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் நிறைவு செய்துள்ளனர். ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக வரி (Tariff) கொள்கைகளால் சந்தையில் அதிர்வுகள் ஏற்பட்ட போதிலும், ஆண்டிறுதியில் S&P 500 குறியீடு சுமார் 17 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நிலவும் அபரிமிதமான ஆர்வம் காரணமாக முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளன. இருப்பினும், 2026-ஆம் ஆண்டு சவால்கள் நிறைந்ததாக இருக்கும் […]

அரசியல் இலங்கை செய்தி

ஓடவும் மாட்டேன்: ஒளியவும் மாட்டேன்! சிறைவாசம் குறித்து நாமல் கருத்து!

  • December 31, 2025
  • 0 Comments

“தமது தேவைக்கேற்ப சட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கின்றது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa குற்றஞ்சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை பார்வையிடுவதற்காக சென்று வரும் வழியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாம் பொலிஸாரைக் கண்டு ஓடி ஒளியமாட்டோம். உரிய வகையில் அறிவித்தல் […]