இலங்கை செய்தி

காசிகோட் யானை சுரங்கப்பாதை பணிகள் ஜனவரி 19 இல் மீண்டும் தொடக்கம்

  • January 15, 2026
  • 0 Comments

காசிகோட் யானை சுரங்கப்பாதை திட்டத்தின் பணிகள், கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து செய்யப்பட்ட விரிவான ஆய்வுக்குப் பின்னர், ஜனவரி 19 ஆம் திகதி மீண்டும் தொடங்கப்பட உள்ளன. ரயில்வே துறை சமர்ப்பித்த கூட்டு ஆய்வு அறிக்கையில், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடு இன்றி முன்பு கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதையில் சில முக்கிய குறைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மனித-யானை மோதல்களை குறைக்கும் நல்ல நோக்குடன் உருவாக்கப்பட்ட முக்கிய திட்டமாக இது கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதுள்ள குறைகளை […]

#Karthi #Pongal2026 #VaaVaathiyaar #ThaiPongal #KarthiFans #TamilCinema பொழுதுபோக்கு

‘வா வாத்தியார்’ கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கார்த்தியின் உருக்கமான பொங்கல் வாழ்த்து!

  • January 15, 2026
  • 0 Comments

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “பொங்கல் பொங்கட்டும்! உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும்! உழவர்களின் வாழ்வு சிறக்கட்டும்! அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!” எனக்கூறி அவர் பொங்கல் பானையுடன்தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் தனது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், விவசாயிகளின் வாழ்வு சிறக்க வேண்டும் […]

ஐரோப்பா

UKவில் பொது இடங்களில் புற்றுநோயை உண்டாக்கும் கண்ணுக்கு புலப்படாத இரசாயனம் கண்டுப்பிடிப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பூங்காக்களில் புற்றுநோய் மற்றும் பிற கடுமையான உடல்நலக் கோளாறுகளுடன் தொடர்புடைய களைக்கொல்லியான கிளைபோசேட்டின் (glyphosate)  எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் பூச்சிக்கொல்லி நடவடிக்கை வலையமைப்பு (PAN UK) முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 13 விளையாட்டு பூங்காக்களில் சுமார் 08 பூங்காக்களில்  கிளைபோசேட்டின்  களைக்கொல்லியுடன் தொடர்புடைய எச்சங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் வளரும் களைகளை அகற்றுவதற்கு இங்கிலாந்து கவுன்சில்கள்  கிளைபோசேட்டினை  (glyphosate) பரவலாக பயன்படுத்துகின்றனர். […]

செய்தி தமிழ்நாடு

எல்லோருக்கும் எல்லாம் – சமத்துவ பொங்கல் நிகழ்வில் ஸ்டாலின் கருத்து

  • January 15, 2026
  • 0 Comments

எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவ நிலையை அடைய திராவிட மாடல் அரசு செயல்படுவதாக சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அனைத்துத் துறை பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஸ்டாலின், ”எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு, நமது திராவிட மாடல் அரசு பணியாற்றி வருகிறது. அதற்காக கடினமாக அரசு […]

இலங்கை செய்தி

பொங்கல் விழாவில் தமிழ் மக்களிடம் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி!

  • January 15, 2026
  • 0 Comments

  எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “தமிழ் மக்களின் முக்கியமானதொரு கலாசார தினமாக தைப்பொங்கல் தினத்தில் உங்களுடன் இணைவதற்கு வாய்ப்புக் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் 11 குழாய் குண்டுகள் கண்டுப்பிடிப்பு – புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!

  • January 15, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் (Canberra) 11 குழாய் குண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த குழாய் குண்டுகள் கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில்  பெல்கோனனில் (Belconnen)  உள்ள ஜின்னிண்டெரா (Ginninderra) ஏரிக்கு அருகில்  கண்டறியப்பட்டுள்ளது. சில குண்டுகள் கண்டுப்பிடிக்கப்படுவதற்கு முன்னதாகவே வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனையவை சிறப்பு வெடிகுண்டு அகற்றும் குழுக்களால்  செயலிழக்க  செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், புலனாய்வாளர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.   […]

இந்தியா செய்தி

கனமழையால் பாதிக்கப்பட்ட 84 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.112 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

  • January 15, 2026
  • 0 Comments

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 111 கோடியே 96 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரியலூர், கடலூர், நாகை உள்ளிட்ட 33 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 85 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள். நெல் உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கான இந்த நிவாரணத் தொகை, விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு […]

ஐரோப்பா செய்தி

உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு: பிரித்தானிய தூதரை வெளியேற்றியது ரஷ்யா

  • January 15, 2026
  • 0 Comments

பிரித்தானியத் தூதரக அதிகாரி ஒருவர் உளவு பார்த்ததாகக் கூறி, அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாஸ்கோவிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தின் இரண்டாம் நிலைச் செயலாளர் காரெத் சாமுவேல் டேவிஸ் (Gareth Samuel Davies) என்பவரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் ரகசியமாக உளவு வேலைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக ரஷ்யாவின் எஃப்.எஸ்.பி (FSB) அமைப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் இரண்டு வாரங்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் குடிநீர் தட்டுப்பாடு: தலைமை அதிகாரி பதவி விலக எம்.பி.க்கள் கடும் அழுத்தம்

  • January 15, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கென்ட் மற்றும் கிழக்கு சசெக்ஸ் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் கடந்த சில நாட்களாக குடிநீர் இன்றி தவித்து வருகின்றன. இந்நிலையில், சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டேவிட் ஹின்டனுக்கு (David Hinton), 4 லட்சம் பவுண்டுகள் போனஸாக வழங்கப்பட உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொருட்படுத்தாமல், அவர் 2030 வரை பதவியில் நீடித்தாலே இந்தத் தொகை வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே சுமார் 30,000 […]

பொழுதுபோக்கு

சிங்கத்தின் கர்ஜனையுடன் வந்த #LK7: அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்!

  • January 15, 2026
  • 0 Comments

நீண்ட நாட்களாக சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்ட அந்த மெகா கூட்டணி இன்று பொங்கல் பரிசாக உறுதியாகியுள்ளது. ‘கூலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் தனது 7-வது படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் இணைந்து இயக்கவுள்ளார். இந்தப் படம் அல்லு அர்ஜுனின் 23-வது படமாகவும் (#AA23), லோகேஷ் கனகராஜின் 7-வது படமாகவும் (#LK7) உருவாகிறது. இன்று வெளியான அனிமேஷன் வீடியோவில், அடர்ந்த காட்டுப்பகுதியில் தீப்பிழம்புகளுக்கு நடுவே அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம் நடந்து வருவது […]