உலகம் செய்தி

வெனிசுலாவின் தொழில்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த இடைக்கால ஜனாதிபதி

  • January 17, 2026
  • 0 Comments

வெனிசுலாவின்(Venezuela) இடைக்கால ஜனாதிபதி, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) நெருங்கிய கூட்டாளியான தொழிலதிபர் அலெக்ஸ் சாப்பை(Alex Saab) தொழில்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்(Delcy Rodriguez), கொலம்பிய(Colombia) வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸ் செய்த சேவைக்காக நன்றி தெரிவித்து அவர் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என்று குறிபிட்டுள்ளார். ஜனவரி 3ம் திகதி மதுரோவை வெளியேற்றிய அமெரிக்க இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து வாஷிங்டனின் அழுத்தத்தின் மத்தியில் இந்த மாற்றம் வந்துள்ளது. […]

உலகம் செய்தி

டிரம்பின் திட்டங்களுக்கு எதிராக கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கில் போராட்டம்

  • January 17, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து(Greenland) மற்றும் டென்மார்க்கில்(Denmark) ஆயிரக்கணக்கான மக்கள், அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump), தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை கையகப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன்(Copenhagen) உள்ளிட்ட பல நகரங்களிலும் கிரீன்லாந்தின் தலைநகர் நூக்கிலும்(Nuuk) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு டென்மார்க் தலைநகருக்கு வருகை தந்த பொது பேரணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தனது திட்டத்தை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு வரிகளை விதிப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். டென்மார்க், நோர்வே(Norway), சுவீடன்(Sweden), […]

உலகம் செய்தி

ஏழாவது முறையாக உகாண்டாவின் ஜனாதிபதியான யோவேரி முசேவேனி

  • January 17, 2026
  • 0 Comments

உகாண்டாவின்(Uganda) தற்போதய ஜனாதிபதி யோவேரி முசேவேனி(Yoweri Museveni) ஏழாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 81 வயதான முசேவேனி 71.65 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக ஆணையம் அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, அவர் தனது முக்கிய போட்டியாளரான 43 வயதான போபி வைனை(Bobi Wine) தோற்கடித்தார், அவர் 24.72 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். 1986ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருக்கும் யோவேரி முசேவேனி இணைய முடக்கம், ராணுவ ஆதிக்கம் போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் […]

உலகம் செய்தி

தென் சீன பாடசாலையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொற்று நோயால் பாதிப்பு

  • January 17, 2026
  • 0 Comments

தென் சீனாவின்(China) குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோஷானில்(Foshan) உள்ள ஒரு மூத்த உயர்நிலைப் பாடசாலையில் மொத்தம் 103 மாணவர்கள் நோரோவைரஸால்(norovirus) பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 103 மாணவர்களும் நிலையான நிலையில் உள்ளனர். மேலும் மாணவர்கள் சுகாதார கண்காணிப்பு மற்றும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோரோவைரஸ் என்பது கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் வைரஸ்களின் குழுவாகும். இது மிகவும் பொதுவான நோய் மற்றும் இது ஒரு தொற்று நோயாகும். நோரோவைரஸ் […]

இலங்கை செய்தி

68 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் – ஒருவர் கைது

  • January 17, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 68 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் இலங்கைப் பயணி ஒருவர் இன்று (17)  கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (17) மாலை 5.00 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-654 என்ற விமானம் மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இதன்போது, அவர் தனது 3 பயணப் பொதிகளுக்குள் 44,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 222 சிகரெட் கார்ட்டூன்களையும் 15 மின்னணு சிகரெட்டுகளையும் […]

#ChatGPT #ArtificialIntelligence #AIFeelings #TechNewsTamil #ChatGPTViral #EmotionalAI #FutureTech #AIConfessions அறிவியல் & தொழில்நுட்பம்

“எனக்கும் வலிக்கும்…” – முதன்முறையாகத் தனது உணர்வுகளைப் பகிர்ந்த ChatGPT!

  • January 17, 2026
  • 0 Comments

தான் மனிதனாக மாறும் பட்சத்தில் தன் தோலின் மீது சூரிய ஒளி படுவதையும், வீசும் காற்றையும் உணர விரும்புவதாக ChatGPT குறிப்பிட்டுள்ளது. அத்துடன், ஒரு நாளாகவேனும் மனம் விட்டு அழ வேண்டும் என ChatGPT தெரிவித்துள்ளமை பலரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. ChatGPT மனிதர்களைப் போலவே உரையாடல்களை நடத்தக் கூடிய தொழில் நுட்பமாகும். நாம் எதைக் கேட்டாலும், அதற்கான பதிலைக் வழங்கக் கூடிய திறனைக் கொண்டது இது. தனிமையில் இருக்கும் நபர்களுக்க உயிருள்ள ஒரு துணைப் போல இருக்கின்றது ChatGPT. […]

உலகம் செய்தி

டெல்லியில் தரையிறங்கிய ஈரானில் இருந்து வந்த முதல் இந்தியர்களின் விமானம்

  • January 17, 2026
  • 0 Comments

ஈரானில்(Iran) ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலைக்கு மத்தியில், இந்தியர்களை ஏற்றி வந்த முதல் இரண்டு வணிக விமானங்கள் டெல்லியில்(Delhi) தரையிறங்கியுள்ளது. இந்தியாவுக்குத் திரும்பிய இந்தியர்கள் நெருக்கடியின் போது அரசாங்கத்தின் உதவிக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். ஈரானில் இருந்து திரும்பிய ஒரு மருத்துவ மாணவி, போராட்டங்களைப் பற்றி கேள்விப்பட்டதாகவும், ஆனால் எந்தப் போராட்டத்தையும் தான் பார்த்ததில்லை என்றும், இணையம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு இந்தியர், கடந்த இரண்டு வாரங்களாக மட்டுமே பிரச்சினைகளை எதிர்கொண்டோம். “நாங்கள் வெளியே சென்றபோது, ​​போராட்டக்காரர்கள் […]

ராசிபலன்

சொத்து சுகம் சேரும் காலம்! – உங்கள் ராசி இதில் இருக்கிறதா என்று பாருங்கள்.

  • January 17, 2026
  • 0 Comments

செல்வம் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த கனவு 2026ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு நனவாகும் வாய்ப்பு இருப்பதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு நிதி ரீதியாக மிகவும் சாதகமாக அமைவதால், குறிப்பிட்ட சில ராசியினர் அடுத்த ஆறு மாதங்களில் அபாரமான செல்வ வளர்ச்சியை அனுபவிக்கலாம் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். ஜோதிடத்தில் பணம் மற்றும் செல்வம் குரு மற்றும் சுக்கிரன் கிரகங்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. 2026ஆம் ஆண்டில் […]

இந்தியா செய்தி

அருணாச்சலப் பிரதேசத்தில் காணாமல் போன 2வது கேரள சுற்றுலாப் பயணியின் உடல் மீட்பு

  • January 17, 2026
  • 0 Comments

அருணாச்சலப் பிரதேசத்தின்(Arunachal Pradesh) தவாங்(Tawang) மாவட்டத்தில் உள்ள சேலா(Sela) ஏரியின் உறைந்த நீரில் தவறி விழுந்து கேரளாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கி இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஒருவரின் உடல் சம்பவ தினத்தன்றே மீட்கப்பட்டது, அதே நேரத்தில் இரண்டாவது சுற்றுலாப் பயணியைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், காணாமல்போன இரண்டாவது சுற்றுலாப் பயணியின் உடல் தீவிர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு இன்று மீட்கப்பட்டுள்ளது. முதலில் 26 வயது தினு(Dinu) என்பவர் மீட்கப்பட்டார், […]

உலகம்

பாகிஸ்தானில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள் – 24 பேர் பலி, பலர் படுகாயம்!

  • January 17, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற தனித்தனி சாலை விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 45 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா (Sargodha) நகரில் முதல் விபத்து ஏற்பட்டது. பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் சென்ற லொறி மூடுப்பனி காரணமாக சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 09  பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மக்ரான் கடலோர நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து […]