ஐரோப்பா செய்தி

பத்திரிகைகளுக்கு எதிரான ஹாரியின் சட்டப் போராட்டம் – லண்டன் நீதிமன்றில் வழக்கு

  • January 18, 2026
  • 0 Comments

சசெக்ஸ் டியூக் இளவரசர் ஹாரி மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். சில செய்தித்தாள்கள் தகவல்களைச் சேகரிக்க சட்டவிரோத முறைகளை பயன்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். டெய்லி மெயில் பத்திரிகையின் வெளியீட்டாளர் நிறுவனமான அசோசியேட்டட் செய்தி தாள் நிறுவனத்திற்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆனால் இந்த முறை, இளவரசர் ஹாரியின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. முன்பு போல அனைத்தையும் எதிர்த்து போராடாமல், தனது குடும்பத்தினருடன் நல்லுறவை மீண்டும் ஏற்படுத்துவது பற்றியும் […]

இலங்கை செய்தி

நாடு தழுவிய சோதனை நடவடிக்கை ; 882 பேர் கைது

  • January 18, 2026
  • 0 Comments

“முடு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நாளாந்த சோதனை நடவடிக்கையின்போது நேற்று 882 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் ஒரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 9 சந்தேக நபர்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. அத்துடன், ஒருவர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையின்போது 400 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 11 கிராம் ஐஸ் மற்றும் 500 கிராம் கொக்கைன் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை செய்தி

கொழும்பு – புத்தளம் ரயில் சேவை நாளை மீண்டும் ஆரம்பம்

  • January 18, 2026
  • 0 Comments

கடந்த 53 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த நீர்கொழும்பு முதல் புத்தளம், பாலவி வரையான ரயில் சேவைகள் நாளை 19ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. பத்துளுஓயா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் சுமார் 200 அடிக்கும் அதிகமான ரயில் பாதை முற்றாகச் சேதமடைந்திருந்தது. ரயில்வே திணைக்கள ஊழியர்களின் தொடர்ச்சியான சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து, இந்தப் பராமரிப்புப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இதற்கமைய, நாளை காலை முதல் வழமை போன்று பாலவி வரை அலுவலக ரயில்கள் இயக்கப்படும் […]

ஐரோப்பா

ஆஸ்திரியாவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 08 பேர் உயிரிழப்பு!

  • January 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரியாவில் (Austria) தனித்தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 08 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட தொடர் பனிச்சரிவு காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய ஆஸ்திரியாவில் உள்ள ஸ்டைரியாவின் (Styria) முர்டல் (Murtal) மாவட்டத்தில் ஏழு பேர் கொண்ட குழு மலையேற்றத்தில் ஈடுபட்டது. அவர்களில் 03 பேர் பனிச்சரிவில் சிக்கி முழுமையாக புதையுண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு பணியாளர்கள் பெரும் போராட்டத்தின் பின் அவர்களை மீட்ட போதும் குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக […]

இலங்கை செய்தி

தைப்பொங்கலை வட மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ மாற்றத் திட்டம்: மன்னாரில் ஆளுநர் அறிவிப்பு

  • January 18, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணப் பொங்கல் விழா – 2026’ வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் திருக்கோவில் முன்றலில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய ‘புதிரெடுத்தல்’ மற்றும் பொங்கலிடும் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். அங்கு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் கல்வி, சுற்றுலா மற்றும் விவசாய அமைச்சுக்கள் ஒன்றிணைந்து தைப்பொங்கலை மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார். […]

இலங்கை செய்தி

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட கொத்மலை பகுதிகளை மீளமைக்கும் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

  • January 18, 2026
  • 0 Comments

‘டித்வா’ புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய் ஆகியவற்றைச் சீரமைக்கும் பாரிய சிரமதானப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக நிலச்சரிவினால் துண்டிக்கப்பட்டிருந்த 20-ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான பிரதான வீதியைச் சீரமைக்கும் பணிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அனுராதபுரம் மற்றும் கினிகத்தேன பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள சுமார் 2,000-ற்கும் மேற்பட்ட தொண்டர்கள், நாளை வரை இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். இதன் மூலம் […]

இந்தியா செய்தி

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 உள்ளிட்ட துப்பாக்கிகள் கண்டெடுப்பு

  • January 18, 2026
  • 0 Comments

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான நரோட் ஜெய்மால் சிங் அருகே, பஞ்சாப் காவல்துறையும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் இணைந்து நடத்திய சோதனையில் பெருமளவிலான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்டவற்றுள் 3 ஏகே-47 ரகத் துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் 98 தோட்டாக்களுடன் வெடிமருந்துகளும் அடங்கும். பஞ்சாப் மாநிலத்தில் வன்முறையைத் தூண்டுவதற்காக இவை எல்லை தாண்டி கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதி ரிண்டா என்பவரே இந்த ஆயுதங்களை அனுப்பியிருக்கலாம் […]

செய்தி

இங்கிலாந்தில் உள்ளுராட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தொழிற்கட்சி – கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்!

  • January 18, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலை தாமதப்படுத்துமாறு  29 கவுன்சில்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதில்  தொழிற்கட்சி தலைமையிலான அதிகாரிகள் பெரும்பான்மையாக உள்ளனர். உள்ளாட்சி மறுசீரமைப்புக்கான (LGR) வளங்கள் பற்றாக்குறை மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கான செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டே தேர்தலை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இருப்பினும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள். லிபரல் டெமாக்ரட்டுகள் மற்றும் ரிஃபார்ம் யுகே (Reform UK) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாமதங்களை கடுமையாக விமர்சித்துள்ளன. தொழிற்கட்சி வாக்காளர்களைத் தவிர்ப்பதாகவும் ஜனநாயகத்தை […]

செய்தி தமிழ்நாடு

கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை கைவிடுக: சீமான் கடும் எச்சரிக்கை

  • January 18, 2026
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் தமிழக அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள புதிய நன்னீர்த் தேக்கத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இத்திட்டம், 16-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும், அந்தப் பகுதியின் சூழலியல் கட்டமைப்பையும் வேரறுக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். பாரம்பரிய மீன்பிடி இடங்களை ‘வெற்று நிலம்’ எனத் தவறாகக் காட்டி அனுமதி பெறப்பட்டுள்ளதாகக் […]

இலங்கை செய்தி

2,200 ஊழியர்கள் தவிப்பு: ஜனாதிபதியின் தலையீட்டை கோரி அவசர கடிதம்

  • January 18, 2026
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ள 2,200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஜனாதிபதியின் தலையீட்டைக் கோரியுள்ளனர். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விருப்ப ஓய்வு பெறத் தீர்மானித்து, அதற்கேற்பத் தமது வருங்காலத் திட்டங்களை வகுத்திருந்த போதிலும், மறுசீரமைப்பு செயல்முறை நாளுக்கு நாள் தாமதமாவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சபை கலைக்கப்படும் உத்தியோகபூர்வ திகதி இன்னும் அறிவிக்கப்படாததால், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய சுயதொழில் முயற்சிகளை முன்னெடுக்க முடியாமல் தாம் கடும் […]