ஐரோப்பா செய்தி

உக்ரைனை எதிர்க்க ரஷ்யாவிடம் இன்னும் 2 ஆண்டுகளுக்கு வளங்கள் உண்டு – லிதுவேனியா

  • April 14, 2023
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்யாவை கடுமையாக விமர்சிப்பவர்களில் லிதுவேனியாவும் ஒன்றாகும், மேலும் 2021 இல் தைவான் ஒரு நடைமுறை தூதரகத்தை திறக்க அனுமதித்த பிறகு சீனாவின் கோபத்தை எதிர்கொண்டது. லிதுவேனியாவின் இராணுவ உளவுத்துறையின் தலைவர், தற்போதைய தீவிரத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு உக்ரைனில் போரைத் தொடர ரஷ்யாவிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்த்து ஒரு வருடத்திற்கு முன்பு உக்ரைனில் தனது சிறப்பு இராணுவ நடவடிக்கையை தொடங்கியதாக மாஸ்கோ கூறுகிறது. கியேவும் மேற்கு நாடுகளும் […]

ஐரோப்பா செய்தி

பெர்லின் பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி செல்ல அனுமதி

  • April 14, 2023
  • 0 Comments

பெர்லினின் பொதுக் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு நகர அதிகாரிகளின் தீர்ப்பிற்குப் பிறகு விரைவில் அனுமதிக்கப்படுவார்கள். மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக திறந்தவெளி குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண் சட்ட நடவடிக்கை எடுத்ததை அடுத்து இது வந்துள்ளது. இரண்டாவது பெண், டிசம்பரில் ஒரு உட்புறக் குளத்தில் இருக்கும்போது மறைக்கச் சொன்னதாகக் கூறினார். அவர்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள், பெர்லினின் குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் இப்போது மேலாடையின்றி செல்ல உரிமை பெற்றுள்ளனர் என்று கூறினார். […]

ஐரோப்பா செய்தி

தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் நெதர்லாந்து

  • April 14, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க, நாட்டின் மிக மேம்பட்ட மைக்ரோசிப் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு டச்சு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. உலகளாவிய மைக்ரோசிப் விநியோகச் சங்கிலியின் முக்கிய நிறுவனமான ASML என்ற சிப் உபகரண தயாரிப்பாளரின் தயாரிப்புகள் இதில் அடங்கும். இதற்கு பதிலடியாக, சீனா இந்த நடவடிக்கைக்கு எதிராக முறையான புகார் அளித்துள்ளது. நெதர்லாந்து சில நாடுகளின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தவறாகப் பின்பற்றாது என்று நம்புவதாக அது கூறியது. வாஷிங்டனால் விதிக்கப்பட்ட ஏற்றுமதி […]

ஐரோப்பா செய்தி

கைப்பற்றப்பட்ட கார்கள்; உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்கிய லாட்வியா !

  • April 14, 2023
  • 0 Comments

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் கார்களை உக்ரைனின் போர் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குகிறது பிரபல ஐரோப்பிய நாடான லாட்வியா. லாட்வியா இந்த ஆண்டு அதிக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடமிருந்து கார்களைக் கைப்பற்றத் தொடங்கியது, மேலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கைப்பற்றப்பட்ட இடங்களை நிரப்பத் தொடங்கியதால், அவற்றை உக்ரேனிய இராணுவம் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடிவு செய்தது.அவ்வாறு கைப்பற்றப்பட்ட ஏழு கார்கள் புதன்கிழமையன்று ஒரு டிரக்கில் ஏற்றி உக்ரைனுக்கு அனுப்பப்பட்டது. 1.9 மில்லியன் மக்கள் வசிக்கும் பால்டிக் தேசமான லாட்வியாவில் இரண்டு […]

ஐரோப்பா செய்தி

கெர்சன் செல் தாக்குதலில் மூவர் பலி!

  • April 14, 2023
  • 0 Comments

கெர்சனில் மேற்கொள்ளப்பட்ட செல் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு கெர்சன் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை செல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் பேருந்துக்காக காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது. இதேவேளை மேற்கு லிவிவ் பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் கொல்லப்பட்தாக உள்ளுர் கவர்னர் குறிப்பிட்டுள்ளார். மூன்று கட்டிடங்கள் தீயில் எரிந்துள்ளன. அதேநேரம் குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

ஐரோப்பா செய்தி

பிரையன்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கான எதிர்வினையே உக்ரைனில் இன்று நிகழ்த்தப்பட்ட தாக்குதல் – மொஸ்கோ!

  • April 14, 2023
  • 0 Comments

உக்ரைனின் பலப்பகுதிகளில் ரஷ்யா கொடூரமாக தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதல் பிரையன்ஸ்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடியாக மொஸ்கோ தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனின் எல்லையை ஒட்டிய ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. குடந்த வாரம் உக்ரைன் சார்புக் குழு ஒன்று தெற்கு பிராந்தியத்தல் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தர். இதில் குழந்தைகள் உள்பட காரில் இருந்த பொதுமக்கள் […]

ஐரோப்பா செய்தி

சிறுபடகுகளில் பிரித்தானியா வருவோருக்கு காத்திருக்கும் தண்டனை… அமைச்சர் சுவெல்லா வெளிப்படை

  • April 14, 2023
  • 0 Comments

சிறுபடகுகளில் இனி பிரித்தானியா வந்து சேரும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சிறைவாசம் காத்திருகிறது என உள்விவகார அமைச்சர் சுவெல்லா பிரேவர்மேன் அதிரடியாக அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது சட்டபூர்வமானதா என்பதை விளக்கும் போது அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. சிறுபடகுகளில் இனி பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு ஜாமீன் அல்லது நீதித்துறை மறுஆய்வுக்கான வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை என்றார். சட்டவிரோதமான இந்த சிறுபடகு பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பிச் செல்லும் மக்களுக்கு […]

ஐரோப்பா செய்தி

2 மில்லியன் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் சைப்ரஸ் குடியரசு!

  • April 14, 2023
  • 0 Comments

துருக்கி சைப்ரஸ் குடியரசு இந்த ஆண்டில் 2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என நாட்டின் சுற்றுலா அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊலகின் மிகப் பெரிய சுற்றுலா வர்த்தக கண்காட்சியான இந்த கண்காட்சியில் டி.ஆர்.என்.சி யின் பெவிலியன் இந்த ஆண்டு மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது. நாங்கள் எங்களின் வளமான வரலாறு இயற்கையான இடங்கள் மற்றும் மாற்று சுற்றுலா விருப்பங்களை காட்சிப்படுத்துவதாக தெரிவித்த அவர், விளையாட்டு மற்றும் சுகாதார சுற்றுலாவை மேம்படுத்தவும் நடவடிக்கை […]

ஐரோப்பா செய்தி

கடுமையான பனிப்பொழிவு : மின்சாரத்தை இழந்த 700இற்கும் மேற்பட்ட குடும்பங்கள்!

  • April 14, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகின்ற நிலையில், 700 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நூர்தர்ன் பவர்கிரிட் கூறுகையில், 710 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காலை 9.30 மணிக்குள் மின்சாரம் கிடைக்க வழிசெய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஐவர் பலி!

  • April 14, 2023
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Zolochivskyi மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு  5 பேர்  உயிரிழந்துள்ளதாக ஆளுநர் Maksym Kozytskyi  தெரிவித்துள்ளார். கட்டிட இடிப்பாடுகளில் அவசரகால பணியாளர்கள் உள்ளிட்ட பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.