இலங்கை செய்தி

மட்டக்களப்பு மக்களிடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

  • July 16, 2023
  • 0 Comments

பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையான கஸ்டங்களை எதிர்நோக்கிவரும் சூழ்நிலையில் சுற்றுலாத்துறையினை காரணம்காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை இங்குள்ள அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். வவுணதீவு பிரதேசத்தில் மதுபானசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்களினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையினை […]

இலங்கை விளையாட்டு

SLvsPAK Test – முதல் நாள் முடிவில் இலங்கை அணி 242/6

  • July 16, 2023
  • 0 Comments

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (16) காலி மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி, இலங்கை அணியின் முதல் 4 விக்கெட்டுகள் 54 ஓட்டங்களுக்கு சரிந்தது. […]

ஆசியா செய்தி

மருத்துவமனையை விட்டு வெளியேறிய இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு

  • July 16, 2023
  • 0 Comments

அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீப கற்பகத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இன்று கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகையை நடத்தியது. தென் கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான சர்வதேச கடற்பரப்பில் இந்த முத்தரப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. 3 நாடுகளை சேர்ந்த […]

ஆசியா

ஜப்பானில் வெப்பநிலை தாக்கம் அதிகரிப்பு!

  • July 16, 2023
  • 0 Comments

ஜப்பானில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அங்கு Heatstoroke  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடுவதால்,மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். ஜப்பானின் 47 மாகாணங்களில், வெப்ப எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கிழக்கு மற்றும் தென்மேற்கில் உள்ள 20 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோ உட்பட சில இடங்களில் வெப்பநிலை கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வரை உயர்ந்ததால், உயிராபத்து ஏற்படும் வகையில் அதிகரித்துள்ளதாக […]

ஆசியா

சீனாவிலும் கடுமையான வெப்பநிலை பதிவாகும்!

  • July 16, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பொதுவான பிரச்சினையாக காலநிலை மாற்றம் மாறியுள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல், சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில். சீனாவில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தள்ளனர். இதன்படி சீனாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது அதிக வெப்ப அலை எச்சரிக்கையாகும். நாட்டின் பெரும்பகுதி அடுத்த வாரம் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் என முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர். வடமேற்கு […]

உலகம்

அமெரிக்காவில் 45 நிமிடம் மாத்திரமே பெய்த மழையில் சிக்கி மூவர் பலி!

  • July 16, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் திடீர் என ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒன்பது மாதக் குழந்தையை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 45 நிமிடங்களில் ஆறு அங்குலத்துக்கும் அதிகமான மழை பெய்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று கார்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

  • July 16, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது, இது இந்த வாரம் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் சகல பாராளுமன்ற கட்சிகளினதும் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் உதவி செயலாளர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த பிரேரணைக்கு கூட்டு ஆதரவை திரட்டுவதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் ஈடுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவித்தார்.

ஐரோப்பா

ஐரோப்பாவிற்கு பயணம் செய்வது பாதுகாப்பானதா?

  • July 16, 2023
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அந்த நாடுகளில் வரும் வாரங்களில் வெப்பநிலையானது 45C பதிவாகும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே அந்தநாடுகளுக்கு பயணம் செய்வது பாதுகாப்பானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரித்தானியாவின் விமான நிலையங்களில், பயண சேவைகள் தொடர்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், காலை 11  மணி முதல் பின்நேரம் 11 மணிவரை வெளியில் செல்ல வேண்டாம் எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கு […]

இலங்கை

யாழில் 13ம் திருத்த சட்டம் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வு

  • July 16, 2023
  • 0 Comments

யாழில் அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் – இந்தியாவின் வகிபாகமும் குறித்த கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாண மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் நேற்று சனிக்கிழமை(15) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாழ்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், அகில இலங்கைத் தமிழர் மகாசபை தலைவர் கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரன், தமிழ் […]

ஆசியா

கொடி ஏற்றுவதில் போட்டி ; இந்தியாவுக்கு போட்டியாக 500 அடி உயரத்திற்கு தேசிய கொடி நிறுவவுள்ள பாகிஸ்தான்

  • July 16, 2023
  • 0 Comments

ஆகஸ்ட் 15ம் திகதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் மற்றும் ஆடம்பரமானநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கும். இந்தியாவின் சுதந்திர தின விழாவை உலகம் முழுவதும் திரும்பி பார்க்கும் . இந்தநிலையில் பாகிஸ்தான் தற்போது நாட்டில் நிலவும் கடனைப் பொருட்படுத்தாமல், அதன் சுதந்திர தின கொண்டாட்டத்திலும் இந்தியாவுடன் போட்டிப்போட முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாளில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றன. ஆனால் இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 14ம் திகதி […]