ஐரோப்பா

வாக்னர் கூலிப்படையால் அச்சம்… எல்லைகளை மூடும் இரு ஐரோப்பிய நாடுகள்

  • July 29, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை காரணமாக பெலாரஸ் நாட்டுடனான எல்லைகளை மூடும் முடிவுக்கு வந்துள்ளதாக போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகள் அறிவித்துள்ளன. குறித்த தகவலை லிதுவேனியா துணை உள்விவகார அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், பெலாரஸ் நாட்டுடனான எல்லைகளை மூடும் முடிவுக்கு வந்துள்ளது உண்மைதான். எல்லையை மூடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார். ரஷ்யாவில் ஜூன் மாதம் ஆயுத கிளர்ச்சி ஒன்றை ஏற்படுத்த முயன்று தோல்வியை எதிர்கொண்ட நிலையில், வாக்னர் கூலிப்படை தற்போது பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளது.இந்த நிலையிலேயே […]

இலங்கை

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி உட்பட வெளிநாடு செல்ல முயற்சித்த பெண்ணொருவர் கைது!

போலி விசா அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர் இதேவேளை, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குறித்த பெண்ணுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை

கர்பிணியின் வயிற்றில் துணி வைத்து தைத்த விவகாரம் குறித்து விசாரணை!

  • July 29, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு வைத்தியசாலையில் கர்பிணிப்பெண் ஒருவரின் வயிற்றில் துணித்துண்டுகளை வைத்து தைத்த விவகாரம் குறித்த வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் பல நாட்களாக நீடித்த வயிற்றுவலி காரணமாக 12 தடவைகள் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, ​​அவரது வயிற்றில் துணி துண்டுகள்  இருந்த நிலையில் அவரது வயிறு […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமோர் நெருக்கடி!

  • July 29, 2023
  • 0 Comments

மருந்து மாஃபியாவில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களால் சுகாதார அமைச்சகம் கட்டுப்படுத்தப்படுகிறது என சுகாதார நிபுணர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சரை இந்த நிறுவனங்கள் வற்புறுத்துவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிறுவனங்களின் தாளத்துக்கு அமைச்சரும் ஆடுவாரா என்று தொழிற்சங்கங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்றார். சுகாதாரச் செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ஆனால் மின்சார கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் […]

செய்தி

பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் : உயர்மட்ட இராஜதந்திர உரையாடல்களைத் தொடங்குவது குறித்து ஆய்வு!

  • July 29, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தென் பசுபிக் பிராந்தியத்திற்கான தனது விஜயத்தின் பின்னர் நேற்று (28) இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது பிரான்ஸ் ஜனாதிபதியை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அன்புடன் வரவேற்றதுடன், இருநாட்டு தலைவர்களும் ஏறக்குறைய ஒரு மணித்தியாலமும் பதினைத்து நிமிடங்கள் நட்பு ரீதியாக கலந்துரையாடியுள்ளனர். இதன்போது பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் […]

இலங்கை

மன்னாரில் நலன்புரி நன்மைகள் சபையின் பயனாளிகளுக்கு அரச அதிபரின் முக்கிய அறிவிப்பு

  • July 29, 2023
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உடனடியாக வங்கி கணக்கை ஆரம்பித்து சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னார் மாவட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் இன்று சனிக்கிழமை (29) முதல் எதிர் வரும் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வங்கி கணக்குகளை திறக்க முடியும். நாளை ஞாயிறு (30) மற்றும் 1 […]

இந்தியா

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து – 52 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

  • July 29, 2023
  • 0 Comments

மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் உள்ள மேம்பாலத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 52 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (29.07) காலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்களில் 20 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 30 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பா

ரஷ்யா-ஆப்பிரிக்கா இடையிலான உச்சி மாநாட்டில் புடின் செய்த செயல் – வைரலான வீடியோ

  • July 29, 2023
  • 0 Comments

பிற நாட்டு தலைவர்கள் நின்று கொண்டு இருப்பதை பார்த்து தனது இருக்கையில் இருந்து எழும்ப முயன்ற ஆப்பிரிக்க நாட்டு ஜனாதிபதியை ரஷ்ய ஜனாதிபதி புடின் இருக்கையில் அமரும் படி கேட்டுக் கொண்டார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஐ.நாவின் உணவு தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியது.இதனால் ஆப்பிரிக்க நாடுகள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்படும் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு தேவையான தானியங்களை வழங்க ரஷ்யா உதவும் என தெரிவித்து இருந்தது.இந்நிலையில், […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் குறித்து நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

  • July 29, 2023
  • 0 Comments

எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்கான பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் ‘புதிய முறைமை நடைமுறையாகும் வரையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு முறைமைகளில் மாற்றம் ஏற்படாது. குறைந்த வருமானம் கொண்டோர் சிரேஷ்ட பிரஜைகள்,  சிறுநீரக நோயாளர்கள் உட்பட ஏனைய நோய் நிலைமைகளுக்கு உள்ளானவர்களுக்காகஇ தற்போது வழங்கப்படுகின்ற நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். […]

இலங்கை

தையிட்டி விகாரை பகுதியில் மக்களின் காணிகள் தொடர்பில் சாதகமான முடிவு – அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா

  • July 29, 2023
  • 0 Comments

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் இன்று(29) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக […]