இலங்கை

வவுனியாவில் வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

வவுனியா பூந்தோட்டம் குடியிருப்பு வீதியில் இன்று (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் வாகனத்துடன் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் பெரும் சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை […]

இலங்கை

வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 160 கிலோ கிராம் எடை கொண்ட கடல் ஆமை!

மன்னாரில் வீடொன்றில் கயிற்றால் கட்டி உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மீட்டுள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டிக்கொட்டுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடலாமை மறைத்து வைக்கப் பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினருக்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டது. குறித்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் உரிய அதிகாரிகளுடன் சென்று கடந்த வியாழக்கிழமை மாலை […]

இலங்கை

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! யாழ்.ஊடக அமையம்

ஊடக அடக்குமுறையினை கட்டவிழ்த்து கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் கோரியுள்ளது. இலங்கை இளம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதர நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, பொரளையில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். குறித்த கைது நடவடிக்கையை கண்டித்து, யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையையையே அவ்வாறு கோரியுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் […]

இலங்கை

வடகிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளுமாறு நாங்கள் கோரவேண்டும்! செல்வம் அடைக்கலநாதன்

இந்த நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால் வடகிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தினை நாங்கள் கோரவேண்டும். அதன் மூலமே தமிழர்களின் இறையான்மையினை பாதுகாக்காமுடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யூலைக் கலவரத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கதின் முன்னாள் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை உட்பட 53 போராளிகளின் நினைவான தமிழ்த் தேசிய வீரர்கள் தினத்தின் 40வது […]

அறிந்திருக்க வேண்டியவை

கோடாரி தைலத்தின் கதை!

  • July 29, 2023
  • 0 Comments

90களில் இந்த தைலம் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். எடுத்துச் செல்ல இலகுவாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தைலம் மலிவு விலையும் கிடைத்தது. இதனாலேயே ஏழைகளின் நண்பனாக மாறிபோனது இந்த கோடாரி தைலம். இந்த தைலம் தோன்றிய வராறு பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த தைலம் சிங்கப்பூரில் கண்டுப்பிடிக்கப்பட்டாலும், இதனை கண்டுப்பிடித்தவர் சீனாவை சேர்ந்தவர்தான்.  1928ஆம் ஆண்டு சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த  லியூங் யுன் எனும் சீனர், ஷ்மிட்லர் (Dr.Schmeidler)  எனும் ஜெர்மானிய மருத்துவர் அளித்த […]

இந்தியா

இந்தியர்களுக்கு ‘இ-விசா’ வழங்கும் ரஷ்யா!

ஆகஸ்ட் 1-ம் திகதி முதல் இந்தியர்களுக்கு ‘இ-விசா’ வழங்க ரஷ்யா தீர்மானித்துள்ளது. இந்த இ-விசா மற்ற வழக்கமான விசாவைப் போலவே பயன்படுத்தப்படலாம். தூதரகங்கள் அல்லது வேறு ஏதேனும் சரிபார்க்க வேண்டிய தேவையை இந்த ‘இ-விசா’ நீக்குகிறது. நாட்டிற்கு வருகை தரும் பயணிகளுக்கான விசா நடைமுறையை எளிதாக்கும் வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் “இ-விசா” முறையை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா உட்பட மொத்தம் 52 நாடுகள் தகுதி பெற்றுள்ளன, இந்த நாடுகளைச் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் முதியவர்களை குறிவைத்து மோசடி- இந்திய இளைஞருக்கு 8ஆண்டுகள் சிறை!

  • July 29, 2023
  • 0 Comments

இந்திய வம்சாவளியை சேர்ந்த கிஷன் பட் (28) என்பவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கிஷன் பட் அங்கு பலரிடம் பொலிஸ் அல்லது வங்கி அதிகாரி போல தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பழகி வந்துள்ளார். குறிப்பாக கிஷன் பட் முதியவர்களை தனது சதி வலையில் வீழ்த்தி வந்தார். அப்போது வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் தனது வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி உள்ளார். அந்த வகையில் சுமார் ரூ.2¾ கோடி வரை மோசடியில் கிஷன் பட் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. […]

இலங்கை

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை!

  • July 29, 2023
  • 0 Comments

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று (28.7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு கருத்துக்களை தெரிவிப்பதாகவும் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு மாத்திரமே உள்ளதாகவம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் […]

செய்தி

பிரபல நடிகையை உருகி உருகி காதலித்த அப்பாஸ் : சமயம் பார்த்து கழட்டி விட்ட நடிகை!

  • July 29, 2023
  • 0 Comments

நடிகர் அப்பாஸ் 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர். தற்போது வெளிநாட்டில் செட்டிலாகியுள்ள அவர் அண்மையில் கொடுத்த நேர்காணல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. அடுத்தடுத்து படங்கள் நடித்து வெற்றி பெற்று இருக்க வேண்டிய அப்பாஸிற்கு,  குறுகிய காலகட்டத்திலேயே சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல்  சினிமாவில் இருந்தே விலகிச் சென்றார். இந்நிலையில், அப்பாஸ் பிரபல நடிகை ஒருவரை துரத்தி துரத்தி காதலித்து வந்தாராம். ஆனால் அந்த நடிகையோ சரியான நேரம் பார்த்து அவரை கழட்டி விட்டுவிட்டாராம். ஆம்  […]

பொழுதுபோக்கு

லியோவில் மிரட்டும் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம்! படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தில் ஆண்டனி தாஸ் என்று அழைக்கப்படும் முக்கிய கதாபாத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் ‘லியோ’ படத்தின் புதிய வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இது தளபதி விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தத்தின் 64 வது பிறந்தநாளாகும், மேலும் இயக்குனர் லோகேஷ் […]