இலங்கை

2024 தேர்தல் ஆண்டாக இருக்கும்: ருவான்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி அமைக்கும் என தெரிவித்துள்ளார். “எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் குடியரசுத் தலைவருடன் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்,” என்று அவர் கூறினார். விஜேவர்தன மேலும் கூறுகையில், 2024ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை!

  • July 30, 2023
  • 0 Comments

இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோகும் செயற்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர்  பாஸா குலேரைச் சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். Fethullah Gulen குழுவின் தலைமையிலான Fethullah பயங்கரவாத அமைப்பை ஒடுக்குவதற்கு இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் […]

ஆசியா

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 35பேர் உயிரிழப்பு!

வடமேற்கு பாகிஸ்தானில் தீவிர இஸ்லாமியக் கட்சியின் அரசியல் கூட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள கர் நகரில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-எஃப் (JUI-F) கட்சியின் 400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கூடியபோது இந்த குண்டுவெடிப்பு நடத்தது “மருத்துவமனையில் 39 இறந்த உடல்கள் இருப்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும், அத்துடன் 123 பேர் காயமடைந்துள்ளனர், இதில் 17 பேர் […]

அறிந்திருக்க வேண்டியவை

பருக்கள் வருவதால் கவலைப்பட வேண்டுமா? : மனரீதியாக ஏற்படும் மாற்றங்கள் என்ன?

  • July 30, 2023
  • 0 Comments

தற்போதைய இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கும் பிராதான பிரச்சினையில் ஒன்றுதான் இந்த பருக்கள் முகத்தில் வருவது. இந்த பிரச்சினையை சந்திக்காதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பாரிய ஒரு சவலாக உருவெடுத்திருக்கிறது.  அத்துடன் இந்த பருக்களை இல்லாமல் செய்வதற்கு பல விடயங்களை செய்வர்களும் உண்டு. குறிப்பாக வீட்டில் வைத்தியம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அதேநேரம் மிகப் பெரிய கிளினிக்குகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் செய்வதை விட முதலில் நாம் ஒரு விடயத்தில் கவனம் செலுத்த […]

உலகம்

ரஷ்யக் கடற்படை தின அணிவகுப்பில் கலந்துகொண்ட புடின்! அங்கு நடந்தது என்ன?

ரஷ்யாவில் நடைபெற்ற அந்நாட்டின் 327-வது கடற்படை தின கொண்டாட்டத்தில் அதிபர் புடின் பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பில் கலந்து கொண்டார். செயிண்ட் பீட்டர்ஸ்-பர்க் துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில், போர்க் கப்பல்களில் நின்றபடி வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர். கடற்கரையில், பீரங்கிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டு, வானில் குண்டுமழை பொழிந்து, போர் ஒத்திகை நடத்தப்பட்டது. பின்னர் வீரர்கள் மத்தியில் பேசிய புடின், யுத்த காலத்தில் திறமையாக செயல்பட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார். […]

இலங்கை

யாழில் தொடர்ச்சியாக 4 கோவில்களில் ஊண்டியல் திருட்டு…

  • July 30, 2023
  • 0 Comments

யாழ்பாணத்தில் தொடர்ச்சியாக மாணிப்பாய் பொலிஸ் பிரிவில் நான்கு நாட்களுக்குமுன் சுதுமலை அம்மன் மற்றும் வைரவர் பிள்ளையார் கோயில் போன்ற நான்கு இடங்களில் உண்டியல் திருட்டு இடம்பெற்றுள்ளது. மணிப்பாய் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர் இதனை யாழ்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அதன் CCTV உதவியுடன் இன்று குறித்த சந்தேக நபரை வண்ணார் பண்னை சிவன் கோவிலடி முன்னால் உள்ள உணவகத்தில் வைத்து கைது செய்து விசாரித்தனர் அவரிடம் […]

வாழ்வியல்

மழைக்காலங்களில் வரும் மோசமான கண் காய்ச்சல் பிரச்சனையை தவிர்க்க…

  • July 30, 2023
  • 0 Comments

மழைக்காலம் நல்ல ஈரப்பதமான வானிலையை வழங்குவது மட்டுமின்றி, நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களின் பரவல்களையும் அதிகமாக கொண்டு வருகிறது. ஈரப்பதமான வானிலை மற்றும் தேங்கி நிற்கும் நீர் ஆகியவற்றின் கலவையானது பல்வேறு நோய்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி, நமது ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் உட்பட டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா போன்ற ஆபத்தான நோய்தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மழைக்காலம் தொடர்பான பொதுவான நோய்களில், கண் காய்ச்சல் அல்லது […]

இலங்கை

இலங்கை பெற்றோல் நிலையங்களில் எரிபொருள் இருப்பு இல்லை!

  • July 30, 2023
  • 0 Comments

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை நீக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று இடம்பெற்ற குழுக்கூட்டத்தில் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் கருத்துரைத்த அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அடுத்த இரண்டு மாதங்களுக்குள் கோட்டா முறையை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி, நிதியமைச்சகம் மற்றும் அமைச்சரவை அமைச்சரவையுடன் கலந்துரையாடி முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறோம். ஒவ்வொரு […]

இலங்கை

பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு! நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவு

புதிய பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதேவேளை, நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவுகளினால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படும் என […]

இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் சட்டவிரோத கருத்தரிப்பு

  • July 30, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருத்தரிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கருத்தரிப்போரில் கூடுதலானவர்கள், திருமணம் முடிக்காதவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், சட்டவிரோத கருத்தரித்தல் உள்ளிட்ட பெரும்பாலான தவறுகள் முக்கியமாக அலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் உறவுகளால் ஏற்படுவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான தவறுகள் 2020 ஆம் ஆண்டு 34 இடம்பெற்றுள்ளன. 2021 இல் 48 ஆக அதிகரித்தது. இது 41 சதவீதமாகும். 2022 இல் 65 ஆக அதிகரித்தது. […]