ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றின் 8வது அலை – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

  • November 3, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றின் 8வது அலை உருவாகி வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கடந்த காலத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 23.6 சதவீதம் அதிகரித்துள்ளது. திட்டமிட்டபடி தினசரி தடுப்பூசி செயல்முறைகள் நடைபெற்று வந்த போதிலும், ஆஸ்திரேலியாவில் கொரோனா அபாயம் நீங்கவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அக்டோபர் 24 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், 6,550 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு நாளைக்கு சராசரியாக 936 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய Update

  • November 3, 2023
  • 0 Comments

வாட்ஸ்அப் தனது அடுத்த அசத்தல் அப்டேட்டை தந்துள்ளது. இதன் மூலம் தனது தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒரு டிபி புகைப்படமும், தொடர்பு பட்டியலில் இல்லாதவர்களுக்கு வேறொரு டிபி புகைப்படமும் வைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த வாட்ஸ்அப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது. […]

இலங்கை

இலங்கையில் மாணவர்களை கண்காணிக்க புதிய புலனாய்வு பிரிவை உருவாக்க நடவடிக்கை!

  • November 3, 2023
  • 0 Comments

தேசிய புலனாய்வு பிரிவினருடன் இணைந்து புதிய சமூக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகளை தடுக்க புதிய புலனாய்வு பிரிவினூடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பள்ளிகளில் போதைப்பொருள் மற்றும் தவறான செயல்களை குறைக்கவும், ஒழிக்கவும் முடியும் என நம்பிக்கை வெளியிட்ட அவர், இளைஞர்கள் மத்தியில் இருந்து தேசிய ஹீரோக்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் […]

மத்திய கிழக்கு

காசாவில் புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நோயாளர்களை அழைத்துச் செல்ல துருக்கி விருப்பம்!

  • November 3, 2023
  • 0 Comments

காசாவில் உள்ள மருத்துவமனையில் இருந்து புற்றுநோய் நோயாளர்களை அழைத்துச் செல்ல துருக்கி தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காசா பகுதியில் உள்ள ஒரே புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையாக இருந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுவீச்சி தாக்குதல்களை நிகழ்த்தியுள்ள நிலையில், துருக்கி மேற்படி அறிவித்துள்ளது. இது குறித்து X தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சர் கோகோ, தேவையான ஒருங்கிணைப்பு செய்யப்பட்டால், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அவசர உதவி தேவைப்படும் மற்றவர்களையும் துருக்கிக்கு கொண்டுச் செல்ல தயார் எனக் கூறப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

கனடாவில் குடியேற திட்டமிடுவோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

  • November 3, 2023
  • 0 Comments

கனடாவில் பெரும்பாலான மக்கள் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் 2026 முதல் நிரந்தர குடியிருப்பாளர்களின் உட்கொள்ளலை அதிகரிக்க முடியாது என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் குடியேற்ற அளவுகள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு அறிவித்தபடி, 2024 ஆம் ஆண்டில் 485,000 நிரந்தர குடியிருப்பாளர்களையும், 2025 ஆம் ஆண்டில் 500,000 நிரந்தர குடியிருப்பாளர்களையும் ஒட்டாவா பராமரிக்கிறது. தற்காலிக பணியாளர்கள் மற்றும் சர்வதேச […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பகுதி நேர பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • November 3, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பகுதி நேர பணிகளை செய்வர்களுடைய ஊதியத்தில் அதிகரிப்பு தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டில் பகுதி நேர வேலைகள் தொடர்பில் பல சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பகுதி நேர வேலை செய்பவர்களுடைய ஆக கூடிய ஊதியமாக 520 யூரோவாக காணப்படுகின்றது. இந்நிலையில் 1.1.2024 முதல் பகுதி நேர பணிகளை மேற்கொள்வோர்களின் உழைப்பு தொகையானது 538 யூரோவாக உயர்வடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜெர்மனியில் எதிர் வரும் வருடம் அடிப்படை சம்பளமானது ஒரு மணித்தியாத்துக்கு 12 யுரோ 41 […]

இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை நீடிக்கும்!

  • November 3, 2023
  • 0 Comments

தற்போதைய மழையுடனான காலநிலை இன்று (03) மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று (03.11) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100மி.மீ  மேல் பலத்த மழையும் பெய்யும். மற்ற பகுதிகளில் சில இடங்களில் மி.மீ. 50க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • November 3, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு அரசாங்கம் இந்த ஆண்டு இறுதியிலும் உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கமைய, குறைந்த வருமானம் கொண்ட பல மில்லியன் பிரெஞ்சு மக்கள் கிறிஸ்துமஸ் போனஸால் பயனடைவார்கள் என அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1998ஆம் ஆண்டு முதல் இருக்கும் இந்த ஊக்கத்தொகை, மிகவும் தேவைப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித் தொகை மூலம் பல மில்லியன் மக்கள் நன்மையடைவார்கள். ஆண்டின் […]

ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை

  • November 3, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள் தங்கள் அரசியல் காரணங்களுக்காக இந்த பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நீடிக்கும் இவ்வேளையில் வெளிநாட்டினருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “தற்போது நடைபெற்று வரும் அந்த மோதலில் பல அப்பாவி மக்கள் இறந்துள்ளதாகவும், அது உலகளவில் உணர்ச்சிகளைத் தூண்டியுள்ளதாகவும் இன்று மனிதவள அமைச்சக பேஸ்புக் பதிவில் கூறியது. அதிக பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, இது போன்ற வெளிநாட்டு நிகழ்வுகள் சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கம் மற்றும் […]

இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய லட்ச கணக்கான மக்கள்

  • November 3, 2023
  • 0 Comments

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 450 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா, குவைத், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கே அதிகமானோர் சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இஸ்ரேலில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்கு இலங்கை பணியாளர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு […]