இலங்கை

இலங்கையில் சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்தார். செக் குடியரசைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சீகிரியாவுக்கு இன்று காலை சென்றிருந்த போது குறித்த பெண்ணுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் சீகிரியா – கிம்பிஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறித்த பெண் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை செய்தி

உள்ளாடைகளில் இரத்தினக்கல் கடத்தல் தந்தை மகள் கைது

  • January 14, 2025
  • 0 Comments

தமது உள்ளாடைகளில் இரத்தினக் கற்களை சீனாவுக்கு கடத்திச் செல்ல முயற்சித்த சீன நாட்டவரான தந்தையையும் மகளையும் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விமான நிலையத்தில் இவர்கள் இருவரையும் பொதிகளையும் Scan ஸ்கேன் செய்யும் போது தமது உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த பெறுமதியான இரத்தினக்கற்கள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன. இவர்கள் மறைத்து வைத்திருந்த இடத்தின் கற்களின் பெறுமதி 1கோடி 75 இலட்சம் என மதிப்பிடப் பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இலங்கையில் தங்குமிட விசா வசதி இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இங்கு […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

சீன, ரஷ்ய தொழில்நுட்பம் கொண்ட கார்களை தடை செய்யும் அமெரிக்கா

  • January 14, 2025
  • 0 Comments

அமெரிக்க சந்தையில் சீன தொழில்நுட்பத்தை கார்களில் இருந்து தடை செய்யும் ஒரு விதியை அமெரிக்கா இறுதி செய்துள்ளது. இந்த தடை தேசிய பாதுகாப்பு அபாயங்களில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தின் மென்பொருள் மற்றும் வன்பொருளை இலக்காகக் கொண்டது. வெளியேறும் ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் முயற்சிகளை முடிக்கும் அதே வேளையில், ஒரு மாத கால ஒழுங்குமுறை செயல்முறைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற எதிரிகளிடமிருந்து […]

இலங்கை செய்தி

மாமாவை பழிதீர்க்கவே மகளை கடத்தியதாக சந்தேகநபர் தெரிவிப்பு 

  • January 14, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் மாணவியை கடத்தியமைக்கான காரணத்தை வௌிப்படுத்தியுள்ளார். குறித்த சந்தேகநபர், தனது மாமாவின் மகளையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக தெரிதெரிவித்துள்ளார். பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர், ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்ததாகவும், அங்கு சம்பாதித்த பணத்தை தனது மாமாவிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். பணம் தனக்குத் திருப்பித் தரப்படாததால், இதுபோன்ற செயலைச் செய்யத் தூண்டப்பட்டதாகவும் சந்தேகநபர் கூறியுள்ளார். தவுலகல பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் 18 வயது மகள் […]

இலங்கை செய்தி

புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்ப ஒப்பந்தம்!  

  • January 14, 2025
  • 0 Comments

இந்த வருடத்திற்கான புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா – ஜெட்டாவில் உள்ள அசிலா விருந்தகத்தில் வைத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் அந்த நாட்டின் ஹஜ் யாத்திரைக்கான பிரதியமைச்சர் அப்துல்ஃபட்டா பின் சுலைமான் மஷாட் (Abdulfattah bin Sulaiman Mashat) மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹனிதும சுனில் செனவி ஆகியோரினால் கையெழுத்திடப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

மதுபான விலை அதிகரிப்பால் அரசுக்கு இலாபம்

  • January 14, 2025
  • 0 Comments

2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு மதுபானம் ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாட்டுடனான வரி அதிகரிப்பு தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டு மதுவரித் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் மதுபான வரிகளில் 20% அதிகரிப்பு காரணமாக, மது அருந்துதல் 8.3 மில்லியன் லீற்றர்கள் வரையில் குறைந்துள்ளது. சிகரெட்டுகள் மூலம் வரி வருமானம் 7.7 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும், சிகரெட் விற்பனை 521.5 […]

உலகம் செய்தி

சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை தடுக்கும் விதிகளை நீக்க நடவடிக்கை

  • January 14, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பைத் தடுக்கும் வகையிலான விதிமுறைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பிலான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுல்லிவான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்க – இந்திய சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு தொலைநோக்கு பார்வை சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் வகுக்கப்பட்டது. இதனால் அமெரிக்க-இந்திய முன்னணி நிறுவனங்களுக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு நீண்ட காலமாகத் தடுக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

தீவிர வறுமை விகிதத்தில் வீழ்ச்சி

  • January 14, 2025
  • 0 Comments

2024 ஆம் ஆண்டில் நாட்டில் வறுமை விகிதங்கள் 5 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்திய அரச வங்கி (SBI) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தீவிர வறுமை குறைந்தபட்சமாகக் குறைந்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. ” இந்தியாவில் வறுமை விகிதங்கள் தற்போது 4 முதல் 4.5 சதவீத மட்த்தில் உள்ளது என்றும், மிகக் குறைந்த அளவு தீவிர வறுமை நிலவுவதாகவும் கருதுகிறோம்” என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நுகர்வு செலவு கணக்கெடுப்பின் தரவுகளால் பல ஆண்டுகளாக […]

இலங்கை செய்தி

20 தேசிய விளையாட்டு சங்கங்கள் சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு கடிதம்

  • January 14, 2025
  • 0 Comments

விளையாட்டு அமைச்சர் சுனில் குமாரவினால் கடந்த ஜனவரி 10 இல் தேசிய ஒலிம்பிக் குழு பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வாவுக்கு தடை விதித்த நிலையில் 20 தேசிய விளையாட்டு சங்கங்கள் சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் கௌன்சிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவில் எழுந்துள்ள தற்போதைய பிரச்சினையில் உடன் தலையிடும்படி அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவில் தற்போது எழுந்துள்ள பிரச்சினையை தீர்த்து அதன் […]

இலங்கை செய்தி

சம்மாந்துறை சிறுமி மீது பாலியல் சேட்டை : 69 வயது லொத்தர் வியாபாரி கைது 

  • January 14, 2025
  • 0 Comments

வீரமுனை பிரதேசத்தில் வாடகை வீட்டில் லொத்தர் டிக்கெட் விற்பனை செய்யும் சந்தேக நபர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை செய்ததாக சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (13) 9 வயதுடைய சிறுமியை பாலியல் சேட்டை செய்ததாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை சிறுமியின் தாயார் பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டுக்கமைய லொத்தர் டிக்கெட் வியாபாரியைத்தேடி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வீரமுனைப் […]