ஆசியா

சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 3 வெளிநாட்டவர்கள்

  • May 13, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 9 முதல் 10ஆம் திகி வரை, க்ளூனி பார்க், டன்னர்ன் க்ளோஸ் மற்றும் எங் நியோ அவென்யூவில் உள்ள வீடுகளில் நடந்த மூன்று திருட்டு சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூவரும் Social visit pass என்னும் சமூக வருகை அனுமதியில் சிங்கப்பூர் வந்ததாகவும், மேலும் குற்றங்கள் நடப்பதற்கு ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்ததாகவும் மதர்ஷிப் […]

இலங்கை செய்தி

இலங்கையின் பல பகுதிகளில் இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்!

  • May 13, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு, வளிமண்டலவியல் […]

இலங்கை

இலங்கை பேருந்து விபத்தில் உயிர் பிழைத்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர், அமைச்சர்கள்

கொத்மலை, கெரண்டி எல்லாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை, கம்பளை மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர். காயமடைந்தவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்திக்க பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேனவும் இந்த விஜயத்தில் இணைந்தார். “ஒரு உயிர் இழப்பு கூட ஒரு சோகம் – ஒவ்வொரு நபரும் ஒருவரின் குடும்ப உறுப்பினர்,” என்று பிரதமர் அமரசூரிய வருகைக்குப் பிறகு […]

உலகம்

மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு தொழில்முறை மல்யுத்த வீரராக அறிமுகமான இவர் இந்த வருடம் தனது ஓய்வை அறிவித்தார். சபு, மூன்று முறை உலக ”ஹெவிவெயிட்” சாம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இந்தியாவில் லொரி மீது சரக்கு வாகனம் மோதியதில் 9 பெண்கள்,4 குழந்தைகள் பலி

  • May 12, 2025
  • 0 Comments

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 30 பேருக்கும் மேலானோர் காயமடைந்தனர். சட்டவுட் கிராமத்தைச் சேர்ந்த 50 பேருக்கும் மேற்பட்டோர் பனார்சி என்ற கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு, திங்கட்கிழமை (மே 12) அதிகாலை 2 மணியளவில் சிறிய ரக லாரியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த சரக்கு வாகனத்துடன் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். அதில் 9 பெண்கள், […]

ஐரோப்பா

உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய தன்னார்வலர் ஒருவர் பலி

  • May 12, 2025
  • 0 Comments

கிழக்கு உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் திங்கட்கிழமை தெரிவித்தன. கடந்த வாரம் இசியம் நகருக்கு அருகே கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான நிக் பார்சன்ஸ், இறந்ததாக SBS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.அவர் மனிதாபிமான மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் தொண்டு நிறுவனமான Prevail Together உடன் பணிபுரிந்து வந்தார். அதே சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்தனர், அந்த அமைப்பின் இணை நிறுவனர் கிறிஸ் காரெட் […]

உலகம்

வரிகளின் பெரும் பகுதியை 90 நாட்களுக்கு குறைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புதல்

  • May 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவும் சீனாவும் ஒன்றின் மேல் மற்றொன்று விதித்த இறக்குமதி வரிகளை இப்போதைக்குப் பெரிய அளவில் குறைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம் உலகின் ஆகப் பெரிய இரு பொருளியல்களான அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகப் பூசலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளன. அமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியதுடன் நிதிச் சந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தின. அமெரிக்காவும் சீனாவும், தங்களுக்கிடையே ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விதித்த வரிகளின் பெரும்பகுதியை 90 நாள்களுக்கு ஒத்திவைத்துள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் […]

இலங்கை

இலங்கையின் ஆட்சேபனையை மீறி கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு

இலங்கைப் போரின் இறுதிக் கட்டங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் ஒரு நினைவுச்சின்னம் மே 10 அன்று சின்குவாகவுசி பூங்காவில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது, இது சமூகத் தலைவர்கள் நினைவுகூருதல் மற்றும் நீதிக்கான ஒரு முக்கிய தருணம் என்று அழைத்தனர். 4.8 மீட்டர் துருப்பிடிக்காத எஃகு கட்டமைப்பான தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிராம்ப்டன் நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது. “இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களுக்கு இந்த நினைவுச்சின்னம் […]

இந்தியா

இந்தியா – ராணுவ வீரர்களின் உயிரிழப்பைத் தடுக்க ரோபோ வீரர்களைத் தயாரிக்க தீவிரம்

  • May 12, 2025
  • 0 Comments

ம​கா​ராஷ்டிர மாநிலம், புனே​யில் உள்ள டிஆர்​டிஓ எனப்படும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக அமைப்​பு ராணுவ வீரர்களின் உயிரிழப்பைத் தடுக்க மனித இயந்திர வீரர்களைப் (ரோபோ) பயன்படுத்தத் திட்டமிட்டுள்​ளது. இந்த வீரர்​களைத் தயாரிக்​கும் பணி​யில் ஈடு​பட்​டிருக்​கும் டிஆர்​டிஓ விஞ்​ஞானிகள் பேசியபோது, “இந்​திய ராணுவத்​துக்​காக மனிதர்​களைப் போன்று கை, கால்​களு​டன் கூடிய மனித இயந்திர வீரர்​களைத் தயார் செய்​திருக்​கிறோம். அவற்றின் உடல் பகு​தி​யில் இலகுரக ஆயுதங்​கள் பொருத்​தப்​பட்டு உள்​ளன. “குண்​டுமழை பொழிந்து கொண்​டிருக்​கும் போர்க்​களத்​தில் முன்னேறிச் […]

ஆசியா

இந்தோனீசியாவில் காலாவதியான ஆயுதங்களை அகற்றியபோது வெடி விபத்து; பலர் உயிரிழப்பு

  • May 12, 2025
  • 0 Comments

இந்தோனீசியாவில் காலாவதியான ராணுவ ஆயுதங்களை அகற்றும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜாவா மாநிலத்தில் திங்கட்கிழமை (மே 12) இச்சம்பவம் நிகழ்ந்தது. இது, ஓராண்டுக்கு சற்று அதிகமான காலத்தில் இந்தோனீசியாவில் காலாவதியான ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவமாகும். உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் பொதுமக்கள், நால்வர் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கிறிஸ்டொமெய் சியான்டூரி கம்பஸ் டிவி ஊடகத்திடம் தெரிவித்தார். வெடிப்புக்குப் பின்னால் […]