வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படும் அச்சத்தில் 63 வயது முதியவர் தற்கொலை
கொல்கத்தாவில் உள்ள வீட்டில் 63 வயது முதியவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்பட்டால், வங்கதேசத்திற்கு அனுப்பப்படுவார் என்ற அச்சத்தில் அவர் வாழ்ந்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். டாக்காவில் உள்ள நவாப்கஞ்சில் இருந்து 1972 ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு வந்த திலீப் குமார் சஹா என்ற நபர், ரீஜண்ட் பார்க் பகுதியில் உள்ள ஆனந்தப்பள்ளி மேற்கில் வசித்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தெற்கு கொல்கத்தாவில் உள்ள தாகுரியாவில் உள்ள […]













