இலங்கை

பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை இனி Online இல் சமர்ப்பிக்கலாம்

டிஜிட்டல் தரவு அமைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளதால், பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை இனி வழமையான இணையவழி நடைமுறையின் மூலம் சமர்ப்பிக்கலாம் என இலங்கை பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தால் வழங்கப்படும் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்கள், பத்தரமுல்ல, சுஹுருபாய கட்டிடத்தின் 17-வது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் அனுமதிப் பிரிவால் செயலாக்கப்படுகின்றன.

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், தொடர்புடைய அறிக்கைகளைக் கோருதல் மற்றும் அனுமதிச் சான்றிதழ்களை வழங்குதல் ஆகியவை டிஜிட்டல் தரவு அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் 2026 ஆகஸ்ட் 20 அன்று பிற்பகல் 12.50 மணிக்கு இந்த அமைப்பு செயலிழந்தது. தற்போது நிலமை சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய clear.application@police.gov.lk என்ற தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்