பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை இனி Online இல் சமர்ப்பிக்கலாம்
டிஜிட்டல் தரவு அமைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளதால், பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை இனி வழமையான இணையவழி நடைமுறையின் மூலம் சமர்ப்பிக்கலாம் என இலங்கை பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தால் வழங்கப்படும் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்கள், பத்தரமுல்ல, சுஹுருபாய கட்டிடத்தின் 17-வது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் அனுமதிப் பிரிவால் செயலாக்கப்படுகின்றன.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், தொடர்புடைய அறிக்கைகளைக் கோருதல் மற்றும் அனுமதிச் சான்றிதழ்களை வழங்குதல் ஆகியவை டிஜிட்டல் தரவு அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் 2026 ஆகஸ்ட் 20 அன்று பிற்பகல் 12.50 மணிக்கு இந்த அமைப்பு செயலிழந்தது. தற்போது நிலமை சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய clear.application@police.gov.lk என்ற தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.




