இலங்கை

சிகிரியாவின் கண்ணாடிச் சுவரைச் சேதப்படுத்திய பெண் – அதிரடியாக கைது செய்த பொலிஸார்

  • September 15, 2025
  • 0 Comments

சிகிரியாவிலுள்ள கண்ணாடிச் சுவரில் பெண் ஒருவர் தனது பெயரை எழுதிச் சேதப்படுத்தியுள்ளார். இதனால் குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொண்டை ஊசி மூலம் ஆறு ஆங்கில எழுத்துகளை எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண் அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார். குறித்த பெண் நண்பர்கள் குழுவுடன் சிகிரியாவை பார்வையிட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

செய்தி

2025 ஆம் ஆண்டில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை தொடர்பில் வெளியான தகவல்

  • September 15, 2025
  • 0 Comments

கூகிளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக “YouTube” பெயரிடப்பட்டுள்ளது. உலகளவில் மாதத்திற்கு 1.38 பில்லியன் தேடல்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த மிகவும் பிரபலமான தேடல்கள் “chatgpt” மற்றும் “facebook” ஆகும், ஒவ்வொன்றும் 618 மில்லியன் மாதாந்திர தேடல்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, ஒரு AI கருவி இப்போது உலகின் மிகப்பெரிய சமூக வலைப்பின்னல்களில் ஒன்றின் தேடல் பிரபலமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள முதல் 100 கூகிள் தேடல்கள் மற்றும் கூகிள் தேடப்பட்ட கேள்விகளின் தரவை Semrush […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

இஸ்ரேலை தண்டிக்கவேண்டும் – உலக நாடுகளிடம் கட்டார் விடுத்த கோரிக்கை

  • September 15, 2025
  • 0 Comments

உலக நாடுகள் அவற்றின் இரட்டை நிலைப்பாட்டை நிறுத்திக்கொண்டு இஸ்ரேலைத் தண்டிக்கவேண்டும் என்று கட்டார் கோரிக்கை விடுத்துள்ளது. அரபு, முஸ்லிம் தலைவர்கள் உச்சநிலைச் சந்திப்பை நடத்தவிருக்கும் வேளையில் கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ (Marco Rubio) இஸ்ரேலியத் தலைவர்களைச் சந்திக்கும் வேளையில் அரபு உச்சநிலைச் சந்திப்பும் இடம்பெறுகிறது. சென்ற வாரம் கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிராகத் ஒற்றுமையை வெளிப்படுத்த அரபுத் தலைவர்கள் கூடுகின்றனர்.

பொழுதுபோக்கு

சூதாட்ட செயலியால் சிக்கல் : வசமாக சிக்கும் பிரபல நடிகை ஊர்வசி ரவுடேலா

  • September 15, 2025
  • 0 Comments

ஆன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான பணமோசடி வழக்கில், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவையும், முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மிமி சக்ரவர்த்தியையும் அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பி அழைத்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதை நம்பி பயன்படுத்திய பலர் கடன் நெருக்கடிக்கு உள்ளாகி, தற்கொலை செய்யும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இதையடுத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியது. முன்னதாக ஆன்லைன் சூதாட்ட […]

வாழ்வியல்

கூன் விழுவதன் காரணம் – மருத்துவர் விளக்கம்

  • September 15, 2025
  • 0 Comments

வயதாகும்போது தங்கள் உயரத்தில் சில அங்குலங்கள் குறைவது அல்லது உடலில் கூனல் விழுவது அல்லது குனிந்த முதுகு ஏற்படுவது போன்ற பிரச்னையை சில முதியோர் சந்திக்கின்றனர். ஆனால், இதை பலரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. இதை முதுமையின் இயல்பான ஒரு பகுதியாகவே கருதி அலட்சியம் செய்துவிடுவார்கள். ஒரு குறுகிய காலத்தில் 1.5 அங்குலம் (4 செ.மீ) உயரம் குறைந்தால், அது வெறும் முதுமையின் பாதிப்பல்ல. குனிந்த அல்லது கூன் விழுந்த தோற்றத்துடன் கூடிய திடீர் (கவனிக்கத்தக்க அளவிற்கு) […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI வரவு – 99% வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்

  • September 15, 2025
  • 0 Comments

ஏஐ வரவால் 2030ஆம் ஆண்டுக்குள் 99% வேலைவாய்ப்பு பறிபோகும் என அமெரிக்க பேராசிரியர் கணித்துள்ளார். அமெரிக்காவின் கென்டகியில் உள்ள லூயிஸ்வில்லி பல் கலைக்கழகத்தின் கணினி அறி வியல் பேராசிரியர் ரோமன் யம் போல்ஸ்கி கூறியதாவது: உலகெங்கிலும் உள்ள நிறுவ னங்கள் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்க ஏஐ அமைப்பை விரைவாக செயல் படுத்தி வருகின்றன. இப்போது நாம் இதுவரை கண்டிராத வேலை யின்மை உலகை காண்கிறோம். 10 சதவீத வேலையின்மையை பற்றி நாம் பேசவில்லை. அனை வரையும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் புதிதாக நடப்பட்ட 500,000 மரங்கள்

  • September 15, 2025
  • 0 Comments

மெல்போர்னை பசுமையான மற்றும் வாழக்கூடிய நகரமாக மாற்ற விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. மெல்போர்ன் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு இந்தத் திட்டத்திற்கு 9.5 மில்லியன் டொலர் செலவாகும். திட்டமிடல் அமைச்சர் சோனியா கில்கென்னி கலந்து கொண்ட ஆர்டீர் தெற்கு தொடக்கப்பள்ளியில் நடந்த ஒரு பட்டறையின் போது சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்டீவ் டிமோபௌலோஸ் புதிய திட்டங்களை அறிவித்தார். ஆர்டீர் தெற்கு தொடக்கப்பள்ளி ஏற்கனவே 1,800 க்கும் மேற்பட்ட மரங்களை நடுவதற்கு பங்களித்துள்ளது, இது […]

விளையாட்டு

இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி – கைகுலுக்காத வீரர்களால் சர்ச்சை

  • September 15, 2025
  • 0 Comments

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்திய நிலையில், அவர்களுடன் கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று நடைபெற்ற போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஃபர்கான் 40 ரன்களும், ஷாகீன் அப்ரிடி 33* ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் […]

உலகம்

டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்த சீனா

  • September 15, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சீனா மீதான 50 சதவீத வரிக் கொள்கைக்கு சீனா பதிலளித்துள்ளது. பிரச்சினைகளைத் தீர்க்க அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, போர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும் தடைகள் அவற்றை சிக்கலாக்குகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்லோவேனிய துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சருமான டான்ஜா பஜோனை சந்தித்த பிறகு லுப்லியானாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை

  • September 15, 2025
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சுமார் 50 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா, மத்திய […]