எலோன் மஸ்க்கின் கருத்துகளுக்கு பிரித்தானிய பிரதமர் கண்டனம்
பிரிட்டனில் வன்முறை வருகிறது, அவர்கள் போராட வேண்டும் அல்லது இறக்க வேண்டும் என்று எலோன் மஸ்க் ஒரு குடியேற்ற எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவாக கூறியதை அடுத்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எலோன் மஸ்க்கின் “ஆபத்தான” கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை லண்டனில் நடந்த வன்முறை குழப்பத்தின் போது மொத்தம் 26 அதிகாரிகள் காயமடைந்ததாக பெருநகர காவல்துறையின் அறிக்கைக்குப் பிறகு பிரதமர் கண்டனம் வெளியிட்டுள்ளார். வீடியோ இணைப்பு மூலம் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மஸ்க், பாராளுமன்றத்தை கலைத்து ஸ்டார்மரின் மைய-இடது […]













