இலங்கை செய்தி

திருமலையில் நீரில் மூழ்கிய சகோதரர்கள் சடலங்களாக மீட்பு!

  • April 15, 2026
  • 0 Comments

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூன்று சகோதரர்கள் சடலங்களாக மீடக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்துக்கு அருக்கிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாலத்துக்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள நீரில் மூழ்கி காணாமல் போனார்கள். சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர். தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று (14) செவ்வாய்கிழமை மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். இதன்போதே […]

உலகம் செய்தி

ஈரானில் களமிறங்கினார் பாகிஸ்தான் ராணுவ தளபதி!

  • April 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று ஈரானுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் அமைதி பேச்சுகளை முன்னெடுப்பதற்கு பாகிஸ்தான் மத்தியஸ்தம் வகிக்கின்றது. இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று பேச்சு தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் பேச்சை தொடர்வதற்குரிய முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இதன்ஓர் அங்கமாகவே பாகிஸ்தானைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளது. அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட முக்கியமான செய்தியைப் பகிரவும், தோல்வியடைந்த முந்தைய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆலோசனைகளை மேற்கொள்ளவும் […]

உலகம்

முற்றுகை தொடர்ந்தால் கடல்வழி வர்த்தகம் முடங்கும் – ஈரான் சபதம்!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், செங்கடல், ஓமான் வளைகுடா மற்றும் கடல் வழியாக நடைபெறும் வர்த்தகத்தை முடக்குவோம் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது. ஈரானிய அரசு தொலைக்காட்சியில் வெளியான ஒரு அறிக்கையில், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்ந்தால் மற்றும் “ஈரானின் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்களுக்கு பாதுகாப்பின்மையை உருவாக்கினால்”, அது போர் நிறுத்தத்தை மீறுவதற்கான “ஒரு முன்னுரையாகவும்” அமையும் என்று இராணுவத்தின் மத்திய கட்டளை மையத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். […]

ஐரோப்பா

லண்டனைப் பாதுகாக்க “இரும்புப் பாதுகாப்பு அரண்” தேவை – பாதுகாப்பு ஆலோசகர் கருத்து!

  • April 15, 2026
  • 0 Comments

ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து லண்டனைப் பாதுகாக்க ஒரு “இரும்புப் பாதுகாப்பு அரண்” தேவைப்படலாம் என்று இங்கிலாந்தின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 2018 முதல்  2020 வரை அமைச்சரவைச் செயலாளராக பணியாற்றிய லார்ட் செட்வில் (Lord Sedwill), பெருகிவரும் அபாயகரமான உலகில் பிரித்தானியா தனது பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நமக்கு நிச்சயமாக முறையான வான் பாதுகாப்பு தேவை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

ஐரோப்பா

ஐரிஸில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!

  • April 15, 2026
  • 0 Comments

ஐரிஸில் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்து விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த நிலையில், பிரதான எதிர்கட்சியான சின் ஃபைன் (Sinn Fein) நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. வாக்கெடுப்புக்குச் சற்று முன்பு மாநில அமைச்சர் ஹீலி-ரே,  (Healy-Rae ) தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தார். எரிபொருள் போராட்டங்களைக் கையாண்ட விதம் குறித்து அயர்லாந்து அரசாங்கம் “ஆணவத்துடன்” நடந்துகொண்டதாகவும், விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்திருக்க வேண்டும் என்றும் அவர் […]

உலகம் செய்தி

யுரேனியம் செறிவூட்டும் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போதிலும், பாகிஸ்தானை மத்தியஸ்தராகக் கொண்டு இரு நாடுகளும் தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாற்றிவருகின்றன. ஈரான் தரப்பில் இருந்தும் மேற்படி தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஈரானின் அணுசக்தித் திட்டமானது முற்றிலும் அமைதி வழியிலானது என ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுதக் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க ஈரான் தயாராக இருந்தாலும் தனது உள்நாட்டுத் தேவைக்கேற்ப யுரேனியம் செறிவூட்டும் உரிமையை விட்டுக்கொடுக்காது எனவும் அவர் கூறியுள்ளார். இது […]

உலகம்

அந்தமான் கடலில் படகு விபத்து – 250 பேர் உயிரிழந்திருக்கலாம்!

  • April 15, 2026
  • 0 Comments

கடந்த வாரம் அந்தமான் கடலில் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பங்களாதேஷ் நாட்டினரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  சுமார் 250 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பங்களாதேஷின் டெக்னாஃபிலிருந்து புறப்பட்ட  படகு, மலேசியா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது. பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் மற்றும் அதிகப்படியான கூட்டம் காரணமாக படகு கவிழ்ந்ததாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் தெரிவித்துள்ளார். நீண்டகால இடப்பெயர்வினால் ஏற்படும் பேரழிவுகரமான மனித இழப்புகளையும், ரோஹிங்கியா மக்களுக்கு […]

செய்தி

‘ஈரானுக்கு ஆயுதம் வழங்காதீர்’: தனது கோரிக்கையை சீனா ஏற்றதாக ட்ரம்ப் தகவல்!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்ற தனது கோரிக்கையை சீனா ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது உலக நாடுகளுக்கும் சீனாவுக்கும் நன்மை பயக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா அமைதியான வழிமுறையை விரும்புவதாகவும், தேவைப்பட்டால் போரிடத் தயார் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதேவேளை, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு […]

உலகம் செய்தி

அழுத்தங்களுக்கு பணிந்து போரில் பங்கேற்கோம்: பிரிட்டன் திட்டவட்டம்!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போரில் பிரிட்டன் இணைய வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு தாம் அடிபணியப்போவதில்லை என பிரதமர் Keir Starmer திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள பின்னணியிலேயே பிரிட்டன் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். போரில் இணைவது தங்களது தேசிய நலனுக்கு எதிரானது என்றும் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் Keir Starmer குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுத் தலைவர்களின் கருத்துக்கள் அல்லது அரசியல் நெருக்கடிகளுக்கு அடிபணிந்து நாட்டின் வெளியுறவுக் கொள்கையை […]

இலங்கை செய்தி

தையிட்டியில் அடுத்தது என்ன? யாழில் விசேட கூட்டம்!

  • April 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்களை மீட்டெடுப்பதற்கான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை பிற்பகல் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. “தையிட்டியில் அடுத்தது என்ன?” எனும் தலைப்பில் ‘தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையால் நிலமிழந்த தமிழர்கள்’ அமைப்பின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது. தையிட்டி நிலங்களை அளவீடு செய்து விடுவிப்பதாக அமைச்சர் இ.சந்திரசேகர் அண்மையில் அறிவித்திருந்த போதிலும், அங்கு சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் நிலைப்பாடு குறித்துத் தெளிவான அறிவிப்புகள் எதுவும் […]

error: Content is protected !!