ஐரோப்பா

ஐரிஸில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!

ஐரிஸில் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த நிலையில், பிரதான எதிர்கட்சியான சின் ஃபைன் (Sinn Fein) நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.

வாக்கெடுப்புக்குச் சற்று முன்பு மாநில அமைச்சர் ஹீலி-ரே,  (Healy-Rae ) தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தார்.

எரிபொருள் போராட்டங்களைக் கையாண்ட விதம் குறித்து அயர்லாந்து அரசாங்கம் “ஆணவத்துடன்” நடந்துகொண்டதாகவும், விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்திருக்க வேண்டும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் குறித்து “கடுமையான முடிவுகள் எதுவும் இல்லை” என்று எதிர்க்கட்சி கூறுவது “நேர்மையற்றது” என அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் ( Micheál Martin) தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!