இலங்கை

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • April 13, 2026
  • 0 Comments

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏதேனும் நுகர்வோர் சந்தையில் அநீதி அல்லது பிரச்சினைகளை எதிர்கொண்டால், அலுவலக நேரங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துத் தகவல்களை வழங்க முடியும் என அந்த அதிகார சபையின் தகவல் மற்றும் நுகர்வோர் விவகார பணிப்பாளர் […]

உலகம்

ஹார்மூஸ் நீரிணை முற்றுகை – வீழ்ச்சியடையும் டொலர், சீன யுவான் நாணய பெறுமதி உயர்வு!

  • April 13, 2026
  • 0 Comments

பேச்சு முறிவடைந்தமையினால், அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தை சர்வதேசச் சந்தையில், குறைக்க ஈரான், சீன யுவான் (Yuan) நாணயத்தை பயன்படுத்துவது பற்றிய பேச்சுக்களை உடனடியாக ஆரம்பித்துள்ளது இது தொடர்பாக ஏற்கனவே ஆரம்பித்த சீன – ஈரான் பேச்சுகள், மீண்டும் தீவிரமடையும் என அல் ஜசீரா (Al Jazeera) செய்தி நிறுவனம் கூறுகிறது. இதனால், டொலரைத் தவிர்க்கும் முறைகள் ஊடாக சீனா, ஈரானுக்கு உதவிகள் வழங்கினால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை […]

மட்டக்களப்பு செய்திகள், புதையல் முயற்சி, சிறுவன் பலி முயற்சி, விளக்கமறியல், Batticaloa news, Treasure hunt arrest, Manmunai case. இலங்கை

புதையலுக்கு பயன்படுத்தப்பட்ட சிறுவன் ‘மை’ வைத்துப் பார்க்கும் மந்திரவாதியா?

  • April 13, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு நீதிமன்றின் அதிரடி உத்தரவு மட்டக்களப்பு – மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தவை பிறப்பித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறும் […]

ஐரோப்பா செய்தி

தலைமுறைக்கான பாரிய சீர்திருத்தம் – பாடசாலை உணவில் புதிய விதிகளை அறிவித்த இங்கிலாந்து

  • April 13, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் பாடசாலை மாணவர்களின் மதிய உணவுகளை சீர்திருத்தும் புதிய திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், எண்ணெயில் பொரித்த உணவுகள் தடை செய்யப்படுகின்றன. மேலும், அதிக சர்க்கரை கொண்ட உணவுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. புதிய நடைமுறைகளின்படி, மாணவர்களுக்கு சர்க்கரை நிறைந்த தின்பண்டங்களுக்கு பதிலாக பெரும்பாலும் பழங்கள் வழங்கப்படும். இதேவேளை, சொசேஜ் ரோல் மற்றும் பீட்சா போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தினமும் வழங்க பாடாசாலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மற்றும் கல்லூரித் தலைவர்கள் சங்கம், இந்த மாற்றத்தை […]

வாழ்வியல்

கூந்தல் ஆரோக்கியம்: நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்!

  • April 13, 2026
  • 0 Comments

தலைமுடி உதிர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், உடலின் உள் ஆரோக்கியமே முடியின் தரத்தைத் தீர்மானிக்கிறது என வலியுறுத்துகின்றனர். ஹார்மோன் மாற்றங்கள், தூக்கமின்மை மற்றும் ரசாயனப் பயன்பாடு ஆகியவை முடியின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. வேர்க்கால்கள் ஊட்டச்சத்தை ரத்தத்தின் வழியாகப் பெறுவதால், புரதம் மற்றும் பயோட்டின் நிறைந்த உணவுகள் அவசியமாகின்றன. வெறும் விளம்பரங்களைப் பார்த்து எண்ணெய்களை மாற்றுவதை விட, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சரிவிகித உணவு […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க எச்சரிக்கைக்கு எதிர்வினையாற்றியது சீனா! பிரிட்டனும் கைவிரிப்பு!!

  • April 13, 2026
  • 0 Comments

ஹார்மூஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களும் முற்றுகையிடப்படும் என அமெரிக்க தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், அனைத்து தரப்புகளும் அமைதியை பின்பற்ற வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. ஊலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹார்முஸ் நீரிணை தடையின்றி இயங்குவது அவசியம் என்று சீனா வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்க சீனா தயார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனவே, […]

உலகம் செய்தி

ட்ரம்பின் துறைமுக முற்றுகை வியூகத்துக்கு ஈரான் ராணுவம் பதிலடி!

  • April 13, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்காவின் துறைமுக முற்றுகைத் திட்டத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. துறைமுகங்கள் முடக்கப்பட்டால் அதனை கடற் கொள்ளை செயலாகக் கருதி பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை தமது நாட்டு கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனினும், இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை திறக்குமாறு பல தடவைகள் ஈரானிடம் ட்ரம்ப் வலியுறுத்திவிட்டார். ஆனால் ஈரான் இதற்கு இணங்கவில்லை. இந்நிலையிலேயே […]

உலகம்

ட்ரம்பால் ஏற்பட்ட பின்னடைவு – உலகை ஆளப்போகும் சீனா!

  • April 13, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் முன்னெடுத்துள்ள கூட்டு இராணுவ நடவடிக்கை  சீனாவிற்கு  பெரும் பலம் சேர்த்துள்ளது. உலகளாவிய எரிசக்தி இடையூறுகள், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி, சீனா ஆதிக்கம் செலுத்தும் தொழில்துறைகளை கட்டியெழுப்ப தூண்டுதலாக அமைந்துள்ளது. தற்போது பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து வரும் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆசியாவை நோக்கியே சென்றுகொண்டிருந்தது. ஆசிய நாடுகள் எரிசக்தியைச் சேமிக்கவும், குறைந்துவரும் இருப்புகளை வலுப்படுத்தவும் தீவிரமாக முயன்று வருகின்றன. போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஐரோப்பிய சந்தைகளை […]

உலகம் செய்தி

ஈரான், அமெரிக்கா மீண்டும் பேச்சு நடத்த வேண்டும்: 10 நாடுகள் கூட்டாக வலியுறுத்து!

  • April 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் நிரந்தர போர் நிறுத்த ஏற்பட வேண்டும் என ஆசியான் ASEAN நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இஸ்லாபாமாத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையிலேயே மேற்படி வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வர்த்தகத்திற்கு அவசியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆசியான் வெளிவிவகார அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். எரிசக்தி இறக்குமதிக்கு ஹார்முஸ் நீரிணை வழியை பெரிதும் நம்பியிருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், சர்வதேச […]

இந்தியா செய்தி

மூட நம்பிக்கையின் உச்சம்: சிறுவன் பலி! நடந்தது என்ன?

  • April 13, 2026
  • 0 Comments

பாம்பு தீண்டலுக்கு இலக்கான சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது, மந்திரவாதியிடம் பெற்றோர் அழைத்துச் சென்றதால் அச்சிறுவன் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். இந்தியா, உத்தர பிரதேசத்திலேயே இப்பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு தீண்டியுள்ளது. அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது, பெற்றோர் மந்திரவாதியை நாடியுள்ளனர். குறித்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் […]

error: Content is protected !!