உலகம் செய்தி

வங்கதேசத்தில் இந்து பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொலை

Hindu journalist shot dead in Bangladesh

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர்கள் மீதான தாக்குதலுக்கு மத்தியில், செய்தித்தாளின் தற்காலிக ஆசிரியரும் தொழிற்சாலை உரிமையாளருமான 45 வயது நபர் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கதேசத்தில் உள்ள ஜஷோரில்(Jashore) உள்ள மணிராம்பூர்(Manirampur) துணை மாவட்டத்தின் கோபாலியா பஜார்(Gopalia Bazaar) பகுதியில் ராணா பிரதாப் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அருவா(Arua) கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரின் மகன் பிரதாப், இரண்டு ஆண்டுகளாக கோபாலியா பஜாரில் ஒரு ஐஸ் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.

சம்பவ தினதன்று சிலர் அவரை ஐஸ் தொழிற்சாலையிலிருந்து வெளியே அழைத்து ஒரு சந்துக்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்நிலையி, ஜஷோரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ராணா பிரதாப் மீது பல வழக்குகள் இருப்பதாகவும் ஒரு தீவிரவாதக் குழுவுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர் நரைல்(Narail) மாவட்டத்தில் இருந்து வெளியாகும் பி.டி. கோபோர்(BD Khobor) என்ற நாளிதழின் தற்காலிக ஆசிரியராகவும் அவர் பணியாற்றி வருகிறார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி