ஐரோப்பா

ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் இடது சாரி கட்சி என்று சொல்லப்படுகின்ற லின்ஸ் கட்சியுடைய முக்கிய அரசியல்வாதி ஒருவர் 100 பில்லியன் யுரோக்கள் முதுசமாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு 100 பில்லியன் யுரோக்கள் முதுசமாக வழங்கப்படும் பொழுது சமூதாயத்தில் 10 சதவீதமானவர்களே இந்த பணத்தை பெற்று பயன் பெறுகின்றார்கள் என தெரியவந்துள்ளது.

இதன் காரணத்தினால் சமூதாயத்தில் உள்ள மற்றையவர்கள் இவ்வாறான வசதியுடன் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது.

அதன் காரணத்தினால் அரசாங்கமானது இவ்வாறு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் யுரோக்களை வழங்க வேண்டும் என்ற ஒரு வேண்டுதலை விடுத்து இருக்கின்றார்.

இந்நிலையில் ஏற்கனவே SPD என்று சொல்லப்படுகின்ற சமூக ஜனநாயக கட்சியுடைய முக்கிய தலைவர்கள் இந்த வருட ஆரம்பத்தில் ஒவ்வொரு 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு 60 ஆயிரம் யூரோக்களை வழங்க வேண்டும் என்ற வேண்டுதலை விடுத்து இருந்தது.

இந்நிலையில் இந்த இடது சாரி கட்சியுடைய முக்கிய அரசியல் பிரமுகர் மாட்டின் ஷேடன் என்பவர் வேண்டுதலை விடுத்துள்ளார்.

இவ்வாறான வேண்டுதல் விடுக்கப்பட்ட நிலையில் அரச தரப்பினர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content