இலங்கை

மகாவலி அதிகார சபை மீது கோப் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

மகாவலி அதிகார சபை தனது சேவைகளை வினைத்திறனுடன் செய்யத் தவறியுள்ளதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார குற்றஞ்சுமத்தியுள்ளார்.

பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அதிகாரசபையின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்ட போதிலும்இ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மகாவலி அதிகாரசபையின் கொள்கைகளை ஆராய்ந்துஇ நவீனமயமாக்கலுடன் இணக்கமாக செயற்படுவது தொடர்பில் மறுசீரமைக்குமாறு கூட்டுறவுக் குழுவின் தலைவர் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும்இ நில ஒதுக்கீடு செயற்பாட்டில் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காணி பரிமாற்ற நடைமுறை தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்