உலகம் செய்தி

17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன்

Former Prime Minister Khaleda Zia’s son returns to the country after 17 years

17 ஆண்டுகளாக லண்டனில்(London) சுயமாக நாடுகடத்தப்பட்டு வசித்து வரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின்(Khaleda Zia) மகன் தாரிக் ரஹ்மான்(Tariq Rahman) மீண்டும் வங்கதேசம்(Bangladesh) திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 வயதான தலைவர் கலீதா ஜியாவின் உடல்நிலை மோசமடைந்து செயற்கை சுவாசக் கருவியின்(ventilator) உதவியுடன் உள்ள நிலையில் வங்கதேச தேசியவாதக் கட்சி(BNP) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“எங்கள் செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் டிசம்பர் 25ம் திகதி டாக்காவுக்குத் திரும்புவார் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று வங்கதேச தேசியவாதக் கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம்(Mirza Fakhrul Islam) கட்சியின் பொது கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சுயமாக நாடுகடத்தப்பட்ட 60 வயதான தாரிக் ரஹ்மான் 2008 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி