ஐரோப்பா செய்தி

காய்ச்சலை அலட்சியப்படுத்தக் கூடாது – பெரும் சோகத்தில் பிரித்தானிய மக்கள்

2025 ஆம் ஆண்டு காய்ச்சல் பருவம் குறித்து பிரித்தானிய மக்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது.

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை அமைப்பும் இந்த ஆண்டு காய்ச்சலை “சூப்பர் ஃப்ளூ”, இதுவரை இல்லாத அளவிலான பரவல் என கூறினாலும், மருத்துவ நிபுணர்கள் இதனை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் சாதாரண காய்ச்சல் பருவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலங்களில் காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கத்தில், கடந்த ஒரு தசாப்தத்தில் மோசமான காய்ச்சல் பருவமாக இருக்கலாம் என்ற அச்சம் நிலவியது.

இதற்குக் காரணமாக, ஜூன் மாதத்தில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸில் ஏழு புதிய பிறழ்வுகள் கண்டறியப்பட்டன. இந்த புதிய திரிபு விரைவாக பரவி, “துணைப்பிரிவு-K” என பெயரிடப்பட்டது. இதன் விளைவாக, பிரித்தானியாவில் காய்ச்சல் பருவம் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாக தொடங்கியது.

புதிய வைரஸ் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த ஆண்டு காய்ச்சல் தடுப்பூசியை புதுப்பிக்க தாமதமாகிவிட்டதாகவும் கவலை வெளியிடப்பட்டது.

இருப்பினும், தற்போதைய நிலவரப்படி இந்த ஆண்டு காய்ச்சல், “சூப்பர் ஃப்ளூ” அல்ல என்றும், வழக்கமான காய்ச்சல் பருவத்தைப் போன்றே உள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் காய்ச்சலை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி