ட்ரம்பின் உத்தரவை மீறி வட்டி விகிதங்களை உயர்த்த ஃபெடரல் ரிசர்வ் வங்கி முடிவு
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன; விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இவை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக வலியுறுத்திய போதிலும், ஃபெடரல் ரிசர்வ் (Fed) வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த ஒருமனதாக முடிவெடிடுத்துள்ளது.
இதன்படி வட்டி விகிதங்கள் 3.5 சதவீதம் முதல் 3.75 சதவீதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
“பணவீக்கம் மிக அதிகமாக இருப்பதாலும், நீண்ட காலமாக அவ்வாறே நீடிப்பதாலும்” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஃபெட் தலைவர் கெவின் வார்ஷ், விளக்கமளித்துள்ளார்.
அதிக வட்டி விகிதங்கள் தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பெற விரும்புவோருக்குக் கடன் பெறுவதை அதிக செலவுமிக்கதாக மாற்றுகின்றன; அதே வேளையில், சேமிப்பின் மீதான வருவாயை அதிகரிக்கவும் இவை உதவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




