தினேஷ் ஷாப்டரின் உடலை தோண்டியெடுப்பதற்கு கோரிக்கை
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது உடலை தோண்டி எடுக்க வேண்டும் என ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபை இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு உயிரிழந்தவரின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபையின் இந்தக் கோரிக்கை தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் உத்தரவு பிறப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வழக்கை மீண்டும் தொடர நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
(Visited 15 times, 1 visits today)