இலங்கை செய்தி

22 தொடர்பான விசாரணை நிறைவு: அடுத்து என்ன?

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது.

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் 50 இற்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக 22 இற்கு எதிராகவே அதிக மனுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்றும், இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் குறித்த சட்டமூலத்தின், அரசியலமைப்புக்கு ஏற்புடைய தன்மை தொடர்பான தீர்மானத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (02) தெரிவித்துள்ளது.

அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது உயர்நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர், நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்துவார்.

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை ஈராண்டுகளுக்கு நீடிப்பதை பிரதான விடயமாகக்கொண்டே 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என எதிரணிகள் வலியுறுத்திவருகின்றன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை