அரசியல் இலங்கை செய்தி

ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி

2027 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2027 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக, 2026 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட இச் சட்டமூலத்திற்குச் சட்டமா அதிபரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

இச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியீட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சமர்ப்பித்துள்ளார்.

அமைச்சரவையினால் இம் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2027 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிப்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை