ஐரோப்பா செய்தி

விலைவாசி உயர்வு – குடும்பங்களுக்கு 53 மில்லியன் பவுண்ட் நிதியுதவி

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, வெப்பமூட்டும் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்காக £53 மில்லியன் பவுண்ட் நிதி வழங்கப்படும் என பிரித்தானிய பிரதமர் Starmer தெரிவித்துள்ளார்.

இந்த நிதி குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றம் அவர் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்பமூட்டும் எண்ணெய் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி