உலகம் செய்தி

கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள தயாராகிறது British Airways!

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால், உலகளவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன் விளைவாக, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தாய் அமைப்பான International Airlines Group (IAG) விமான பயணச்சீட்டுகளின் விலையை அதிகரிக்கபோவதாக அறிவித்துள்ளது.

பொதுவாக விமான நிறுவனங்கள் எரிபொருளை முன்னதாகவே நிலையான விலைக்கு வாங்கும் முன்பதிவு பாதுகாப்பு முறையைப் பின்பற்றுகின்றன.

இருப்பினும், தற்போதைய மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளிலிருந்து தப்ப முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, கூடுதல் எரிபொருள் செலவினங்களை ஈடுகட்ட பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இம்மாற்றங்கள் சர்வதேச விமான போக்குவரத்து துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!