பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 07 பேர் பலி
பாகிஸ்தானில் இன்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்விரு சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் குண்டு வாகனம் ஒன்றில் இருந்து வெடித்ததாகவும், இரண்டாவது குண்டு ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
இரண்டு குண்டுவெடிப்புகளும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முதல் குண்டுவெடிப்பில் ஐந்து பேரும், இரண்டாவது குண்டுவெடிப்பில் இரண்டு பேரும் கொல்லப்பட்டதுடன், மேலும மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.





