பொழுதுபோக்கு

ரஜினி முஸ்லிமாக நடிக்க காரணம் என்ன? பயில்வான் வெளியிட்ட பரபரப்பு செய்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி உடன் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது.

இந்த படத்தில் செம மாஸ் லுக்கில் ரஜினி இடம் பெற்றிருந்த நிலையில் லால் சலாம் போஸ்டர் வெளியாகியது.

லால் சலாம் போஸ்டர் வெளியான நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்துள்ளார்.

அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதலில் லைக்காவிடம் லால் சலாம் படத்தை எடுப்பதாக சொன்ன நிலையில், இந்நிறுவனம் படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை.

அதன் பிறகு ரஜினி கேமியோ தோற்றத்தில் நடித்தால் படத்தை தயாரிப்பதாக லைக்கா கண்டிஷன் போட்டுள்ளது. எனவே மகளுக்காக ரஜினி இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார்.

மேலும் ரஜினி முஸ்லிம்களை நண்பர்களாக பார்க்கக்கூடியவர். பாட்ஷா படத்தில் அவர் முஸ்லிமாக நடிக்கவில்லை என்றாலும் டைட்டில் வைக்க சம்மதித்தார்.

இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு லால் சலாம் படத்தில் ரஜினி முஸ்லிமாக நடிக்கிறார். சமீபகாலமாக ஒரு அரசியல் கட்சியை சார்ந்து ரஜினி செயல்படுகிறார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதற்கு சரியான பதிலடி கொடுக்க தான் ரஜினி இந்த படத்தில் முஸ்லிமாக நடிக்கிறார் என பயில்வான் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் கதையைக் கேட்டு மிரண்டு போனதாக பயில்வான் கூறியிருக்கிறார். இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என உறுதியளித்துள்ளார்.

இந்த சூழலில் எப்போதுமே ரஜினி மதம், ஜாதி, இனம் எதையுமே பார்க்க மாட்டார். மேலும் இந்த படமும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்றும் பயில்வான் கூறியுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content