உக்ரைனின் பாரம்பரிய மடாலயம் மீது தாக்குதல் – 04 பேர் பலி!
உக்ரைனின் ஆன்மீக மற்றும் கலாச்சார பகுதியான பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலயம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் மக்களை அவசரமாக வெளியேறுமாறு உக்ரைன் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த வாரம் பிரான்சில் நடைபெறவிருக்கும் ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக, இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1051-ல் நிறுவப்பட்ட, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான, மத்திய கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலயம் நேரடித் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்தது என்று தலைநகரின் இராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாசென்கோ (Tymur Tkachenko) தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜுன் மாதம் தொடங்கியத்தில் இருந்து ரஷ்யாவின் தாக்குதல்களால் இருபது பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




